பக்கம் எண் :


46


பிழைபட்ட நெறியில் இகழ்வுற ஒழுகுபவனெனக் கொண்டாள் கொலெனவும், இவளுடன் இன்று கிளிகடிந்தது என்பொருட்டென்று கொள்ளாது தன்பொருட்டென்று கொண்டாள் கொலெனவும், தன்னைக் கூடுமாறு கூற இடம்பெறானாய் அகன்றனன் எனக் கொண்டாள் கொலெனவும் கருதும்படியாகக் கூறினளென்றாலும், அதனுள்ளே என்னைக் கூட்டுவிக்கச் சொல்லுஞ் சொல்லுக்கு இடம் பெறாமையன்றி இவளைச் சேருமாறு கூறச் சொல்லிடம் பெறாது போயினானல்லனெனவும், வண்டு இழிந்த மலரை ஊதாவாதலால் அப்படிப்போல என்னினிழிந்தாளை அவன் புல்ல விரும்பானெனவும், இவளும் நங்களவொழுக்கத்தைச் சிறிதுணர்தலாலேஇக் குறை முடிக்க மனம் நெகிழ்ந்தமையின் மெய்சோர்வடைய வளை கழன்றனவெனவும், அவனொடு கூட்ட வேண்டி என்னை உடம்படுத்தக் கருதலின் அது தன்னியல்புக் கேற்றதல்லாமையிற் பண்பில் செய்தி யெனவுங் கூறினாளென, ஆராய்ச்சியாற் கொள்ள வைத்தமையிற் குறை நயப்பாயிற்று. மெய்ப்பாடு - இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் - குறைநயப்பித்தல்.

    (பெரு - ரை.) சேணாறுபிடவின் என்றும் நெருனல் என்றும் பாடம். நறவின் நறுந்தாது ஆடிய தும்பி பொன்னுரை கல்லின் தோன்றும் என்றது, அவனோடு நீ கொண்ட கேண்மையை நின் மெய்யிற்றோன்றிய புத்தழகும் புதுப்பொலிவும் எனக்குணர்த்திவிட்டன காண். என்னை மறையாதே கொள் என்னும் இறைச்சிப் பொருள் பயந்து நிற்றலை நுண்ணிதின் உணர்க.

(25)
  
    திணை : பாலை.

    துறை : இது, தலைவி பிரிவுணர்ந்து வேறுபட்டமை சொல்லித் தோழி செலவழுங்குவித்தது.

    (து - ம்.) என்பது, வினைவயிற் பிரியுந் தலைமகன் குறித்தபருவத்து வரவேண்டி, "நீயிர் பிரிகின்றனிரெனக் கேட்டலும் இத்தன்மையானாளைக் கண்டு யானும் ஆற்றலேன்" என்று அவன் செலவழுங்குமாறு கூறி இப்பொழுதே இப்படியாயின் நீயிர் மீண்டுவருமளவும் எங்ஙனம் ஆற்றுமென்னுங் குறிப்புத் தோன்றக் கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்" (தொல்-கற். 9.) என்பதன்கண் பிற என்பதனால் அமைத்துக்கொள்க.

    
நோகோ யானே நெகிழ்ந்தன வளையே 
    
செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை 
    
விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப் 
    
பிண்ட நெல்லின் தாய்மனை யொழியச்  
5
சுடர்முழு தெறிப்பத் திரங்கிச் செழுங்காய் 
    
முடமுதிர் பலவி னத்த நும்மொடு 
    
கெடுதுணை யாகிய தவறோ வையெயிற்றுப்