கூறினாளுக்கு 'அவனை நினைந்து வருந்தேனாதலின், வெறுத்தேனுமல்லேன;் என்னைக் கைவிட்டு வெறுத்து அகன்ற தலைவன் தன்னைப் பிறரிகழாது புகழ வேண்டி மீட்டும் பெறுவதாயினும் யான் உடன்படுவே'னென உள்ளுறையாலே தன்நிலைமையும் அவனறியும்படி கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை, வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதன்கண் காய்தலின் பாற்படுத்துக.
| செந்நெல் அரிநர் கூர்வாள் புண்ணுறக் |
| காணார் முதலொடு போந்தெனப் பூவே |
| படையொடுங் கதிரொடும் மயங்கிய படுக்கைத் |
| தன்னுறு விழுமம் அறியா மென்மெலத் |
5 | தெறுகதிர் இன்துயில் பசுவாய் திறக்கும் |
| பேதை நெய்தல் பெரு நீர்ச் சேர்ப்பற்கு |
| யானினைந்து இரங்கேன் ஆக நோயிகந்து |
| அறனி லாளன் புகழஎன் |
| பெறினும் வல்லேன்மன் தோழி யானே. |
(சொ - ள்.) தோழி செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உறக் காணார் முதலொடு போந்தென - தோழீ! சிவந்த நெற்கதிரை யறுக்கும் மள்ளர் தம் கூரிய அரிவாளினாலே புண்படக் காணாராகக் கதிர்த்தூரொடும் போந்ததனாலே; பூ படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கை - அம்மலர் அரிவாளொடும் கதிரொடும் கலந்தனவாகிய அரிக்கிடையிலே படுக்கையாகக் கிடந்து; தன் உறு விழுமம் அறியா - தான் உற்ற துன்பத்தை ஆராயாமல்; மென்மெலத் தெறு கதிர் இன் துயில் பசுவாய் திறக்கும் பேதை நெய்தல் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு - மெல்ல மெல்லக் கொடிய ஆதித்தனைக் காண்டலும் இனிய துயிலிடத்துப் பசிய வாயைத் திறவாநிற்கும் பேதைமையுற்ற நெய்தன்மிக்க பெரிய கடற்கரைத் தலைவனுக்காக; யான் நோய் இகந்து நினைந்து இரங்கேன் ஆக - யான் படுகின்ற துன்பத்தையும் கடந்து அவனை நினைந்து இரக்கம் உறுவேன் அல்லேன் ஆதலால், அவனை வெறுத்தேனுமல்லேன்; யான் அறன் இலாளன் புகழ என்பெறினும் வல்லேன் - யான் அவ்வறனிலாளன் தன்னை அயலார் புகழும்படி என்னை மீட்டும் பெறுவதாயினும் அதற்கும் இயைகின்றேன்; மன் - அங்ஙனம் வெறாது விடப்பட்டதனால் அதுவும் இல்லையாயிற்று; எ - று.
(வி - ம்.) தஞ்சமென்றடைந்த தன்னைக் கைவிட்டமையின் அறனிலாளன் என்றாள்.