(து - ம்.) என்பது, வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்தோன் குறித்த காலத்து வாராமையாலே தலைமகள் வருந்தினாளாக, அப்பொழுது அவன் விரைவில் வருவதனை அறிந்த தோழி தலைவியை நெருங்கி 'நம் காதலன் பலரறிய வருதலானே நின்னை வரைந்துகொள்ள வருகிறானென்பதை யறிந்தேன்' என்று கூறி உள்ளுறையால் நீ கவலையின்றி வாழ்வாயாக வெனவும் மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.