பக்கம் எண் :


483


இயங்குகின்ற மழைமேகம்போல் மறைக்கப்பட்ட நாடுவிளங்கிய சிலம்பனுடன்; அமைந்த நம் தொடர்பு - விரும்பிப் பொருந்திய நமது தொடர்ச்சி கழிந்துவிட்டதுபோலும்; எ - று.

    (வி - ம்.) உவல் - சருகு. முதுவாய் வேலன் - முதுமைவாய்ந்த வேலன் என விரித்து, அறிவுவாய்ந்த வேலன் எனப் பொருள் கொள்க.

    காதலன் கைவிட்டுப் பிரிந்தமையை நினைத்தலும் உடம்பு இளைத்தலானே கைவளை கழன்றமை கூறினாள். பிரிதலும் பசலைபரந்து நலனைக் கெடுத்தமை தோன்ற 'அல்குலவ் வரிவாட' வென்றாள். இது பசலை பாய்தல்.

    இறைச்சி :- கானவன் சுடுபுகை மேகம்போலத் தோன்றி மறைக்கும் என்றது, நமது ஊழ்வினை காதலனுக்குக் களவுப்புணர்ச்சியே சிறந்தது எனக் காட்டி அவனறிவை மயக்காநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) 'கழிந்துவிட்டது போலும்' என்பது குறிப்பெச்சம். 'நன்னுதல் சாய' என்றும் பாடம். வேலன் கிளவி - வெறிப்பாடல். மங்குல் - மேகம்.

(282)
  
    திணை : நெய்தல்.

    துறை : (1) இது, பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, களவொழுக்கத்தே பகற்குறிவந்த தலைமகனை எதிர்கண்ட தோழி உன்சொல்லை மெய்யென்று கொண்ட இவளழகு கெடும்படி நீ இங்ஙனம் நீட்டித்துவருவது தகுமோவெனவும், உள்ளுறையால் வரைந்து எய்துகவெனவுஞ் சூழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கும் முற்செய்யுட்கோதிய இலக்கணமேயாம்.

    துறை : (2) கடிநகர் புக்க தோழி பிற்றைஞான்று வேறுபடாது ஆற்றனாயென்று சொல்லியதூஉமாம்.

    (து - ம்.) என்பது, அருங்கலந் தந்து வரைந்துகொண்டு மனைவியொடு காதலன் தன்நகர் புகுந்தபின்பு இறைவியின் இல்லறநெறியை அறியுமாறு செவிலியோடு தோழி தலைமகனது மாளிகையிலே சென்று அவனை நெருங்கி நீ காதலி வேறுபாடுறாது மணந்து நன்காற்றினாயென்று மகிழ்ந்து கூறாநிற்பதும் ஆகும்.

    (இ - ம்.) இதற்கு, "அற்றம் அழிவு உரைப்பினும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.

    
ஒண்ணுதல் மகளிர் ஓங்குகழிக் குற்ற 
    
கண்நேர் ஒப்பின் கமழ்நறு நெய்தல் 
    
அகல்வரிச் சிறுமனை அணியுந் துறைவ