(து - ம்.) என்பது, அங்ஙனம் தலைமகன் கேட்குமாறு கூறுகின்றவள், குன்ற நாடன் இரவில் வருதலன்றியும் அயலார் கூறும் பழிச்சொல்லுக்கும் அகலானாகிப் பகற்பொழுதினும் புனத்தே வருகின்றனன்; அவனது கேண்மை நல்லதில்லையென இருவகைக்குறியையு மறுத்து உள்ளுறையாலே உடன்கொண்டு சென்றாயினும் வரைந்து கொள்ளும்படி சூழ்ந்து கூறாநிற்பது.