(து - ம்.) என்பது இல்வயிற் செறித்துக் காவல் செய்யப்படுதலாற் புறத்தே போதற்கியலாது ஆற்றாமைமிக்க தலைவி, முன்பு தலைவன் நம்பால் வந்தபொழுதெல்லாம் அஞ்சாத என்னெஞ்சம் இப்பொழுது இல்வயிற்செறித்தலால் இரவிலே புள்ளொலி கேட்குந்தோறும் தலைவனது தேரின் மணிக்குரலோவென்றஞ்சித் துயில்கொண்டிலதென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "தமர் தற்காத்த காரண மருங்கினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.