(து - ம்.) என்பது, வெளிப்படை.
(இ - ம்.) இதற்கு, "பாணர் . . . . . பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கள. 9) என்னும் விதிகொள்க.
| வயல்வெல் ஆம்பல் சூடுதரு புதுப்பூக் |
| கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் |
| ஓய்விடு நடைப்பகடு ஆரு மூரன் |
| தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொல் |
5 | கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே |
| நீயே பெருநலத் தகையே அவனே |
| நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் |
| தண்கமழ் புதுமலர் ஊதும் |
| வண்டென மொழிப மகனென் னாரே. |
(சொ - ள்.) முள் எயிற்றோய் - முட்போன்ற கூரிய பற்களையுடையோய்!; வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்று உடைப் புனிற்று ஆ தின்ற மிச்சில் - வயலில் மள்ளர் அறுக்கும் கதிரோடு அறுபட்டு அரிச் சூட்டொடு களத்திற் கொணர்ந்து போடப்பட்ட வெளிய ஆம்பலின் அப்பொமுது மலர்ந்த புதிய பூ, கன்றை அணிமையில் ஈன்றுடைய பசுவானது தின்று எஞ்சிய மிச்சிலை; ஓய்விடு நடைப் பகடு ஆரும் ஊரன் - உழுது விட்ட