பக்கம் எண் :


500


இடத்தையுடைய மன்றத்தின்கண்ணே; விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர் - திருவிழாச் செய்தலை மேற்கொண்ட பழைமையான வெற்றியையுடைய இம் மூதூரிடத்தில்; பூங் கண் ஆயம்காண் தொறும் - எம் புதல்வியுடன் விளையாடும் நெய்தன் மலர் போலும் கண்ணையுடைய தோழியரைக் காணும்போதெல்லாம்; எம்போல் - யாம் பெரிய நடுக்கமுற்றுத் துன்பப்படுவதுபோல; எம் இல் பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ - எம் மனையகத்திருந்த பொலிவு பெற்ற கூந்தலையுடைய எம் புதல்வியை மருட்டிப் பலவாய பொய்ம்மொழிகளைக் கூறி; உடன் கொண்டுபோக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாய் - தன் சொற்படி ஒழுகச் செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்ற வன்கண்மையுடைய காளையாவானை ஈன்ற தாயும்; பெருவிதுப்பு உறுக - இத்தகைய கொடிய புதல்வனை ஈன்றதனாலே அவள் பெரிய நடுக்கமுற்றுத் துன்பம் அடைந்தொழிவாளாக!; எ - று.

    (வி - ம்.) விதுப்பு - நடுக்கம். பழவிறல் - பழைய வெற்றி. பொம்மல் - பொலிவு. இங்ஙனம் கூறியதனால் தலைவனுக்குத் தாயும் தலைவிக்குத் தாயுமாவார் ஒருவரை ஒருவர் கடிந்து கூறுதல் பண்டைக் காலமுதல் தமிழ்நாட்டில் நிகழும் வழக்குப்போலும். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - ஆற்றுதல்.

    (பெரு - ரை.) 'பலிக்கள்' என்றும் பாடம். இதுவே சிறந்த பாடம். பலிக்கள் ஆர்கை - பலியாகிய கள்ளை யுண்ணுதலையுடைய குயவன் என்க.

(2")
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, மணமனை உட்புக்க தோழி தலைமகளது கவின்கண்டு சொல்லியது.

    (து - ம்.) என்பது, கொண்டுதலைக் கழிந்த தலைமகன் தன்னகம் புகுந்து தலைமகளை மணஞ் செய்துகொண்ட தறிந்த தோழி, அவன் மாளிகையின் கண்ணே சென்று தலைவியின் புதிய அழகு கண்டு வியந்து 'தலைவனது மார்பு முன்பு நோயும் பின்பு இன்பமுமா யிராநின்றது, இது பொய்ம்மை யன்'றென மகிழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) "பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்ததெறற்கரு மரபின் சிறப்பின் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு 
    
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ 
    
மாயம் அன்று தோழி வேய்பயின்று 
    
எருவை நீடிய பெருவரை அகந்தொறுந்