| சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர் |
| மடத்தகை ஆயங் கைதொழு தாஅங்கு |
| உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல் |
| தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன் |
5 | சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம் |
| முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே |
| நீயுந் தேரொடு வந்து போதல்செல் லாது |
| நெய்வார்ந் தன்ன துய்யடங்கு நரம்பின் |
| இரும்பா ணொக்கல் தலைவன் பெரும்புண் |
10 | ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் |
| பிச்சைசூழ் பெருங்களிறு போலவெம் |
| அட்டில் ஓலை தொட்டனை நின்மே. |