(து - ம்.) என்பது, தலைமகன் ஒருபுறமாக வந்து மறைந்துறைதலை அறிந்த தோழி, புனங்கொய்தலையும் தலைமகளை இல்வயிற்செறிப்பதனையும் அவன் அறிந்து விரைய மணம் புரிந்து கொள்ளும்படி கூறுவாளாகி நமர் தினைப்புனங் கொய்யலுறாநின்றனர்; அன்றி, இறைவியையும் மனையகங்கொண்டு புகுவாராயினார்; இனி, அவளை நமது புனத்தின் கண்ணே காணவும் இயையாதேயென நொந்துகூறாநிற்பது.
(இ - ம்.)இதற்கு, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"
(தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
துறை : (2) சிறைப்புறமுமாம்.
(து - ம்.) என்பது, தலைமகன் சிறைப்புறத்தானாகக் கூறியதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)