(து - ம்.) என்பது, தலைமகன் குறித்த குறியிடத்துவரப் பாணித்தமையால் அது பொறாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி அங்கே தேரின் மணியொலி இசையாநிற்கும்; இளையரும் ஒலியாநிற்பர்; ஆதலின், நினது நலன் நுகரும்படி கொண்கன் இன்னே வருகுவன்காண்; வருகின்ற அவன்தான் நம்மைக் காணாது வருந்துவதை நாம் சிறிது பொழுது கண்டு மகிழும் வண்ணம் இங்குள்ள புன்னையடிமறைவில் மறைந்துகொள்வோம் வருவாயாகவென்று வலியுறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்"
(தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் |
| பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் |
| கடலாடு வியலிடைப் பேரணிப் பொலிந்த |
| திதலை அல்குல் நலம்பா ராட்டிய |
5 | வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் |
| இற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை |
| மாவரை மறைகம் வம்மதி பானாள் |
| பூவிரி கானல் புணர்குறி வந்துநம் |
| மெல்லிணர் நறும்பொழிற் காணாதவன் |
10 | அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே. |
(சொ - ள்.) தோழி கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் - தோழீ! செல்லுதலில் விருப்பமுடைய குதிரை பூட்டிய