| ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழிந்தெனப் |
| 1 பார்த்துறைப் புணரி அலைத்தலிற் புடைகொண்டு |
| மூத்துவினை போகிய முரிவாய் அம்பி |
| நல்லெருது நடை 2 வளம் வைத்தென உழவர் |
5 | புல்லுடைக் காவின் தொழில்விட் டாங்கு |
| நறுவிரை நன்புகை கொடாஅர் சிறுவீ |
| ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல் |
| முழவு முதற் பிணிக்குந் துறைவ நன்றும் |
| விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதின் |
10 | தவறுநன்கு அறியா யாயின் எம்போல் |
| ஞெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர் |
| மலர்தீய்ந்து அனையர் நின்நயந் தோரே. |