பக்கம் எண் :


540


நட்பை எம்மன்னை அறிகுவாளாயின்; எந்தை ஓங்குவரைச் சாரல் தீம் சுனை ஆடி - எந்தையினது உயர்ந்த மலைச் சாரலினுள்ள இனிய சுனையிலே நீராடி; ஆயமொடு குற்ற குவளை மாஇதழ் மாமலர் புரைஇய கண் - தோழியரோடு சென்று பறித்த அச் சுனைக் குவளையின் கரிய இதழ்களையுடைய சிறந்த மலரையொத்த கண்கள்; பனிகலந்து என் ஆகுவ - நீர்கலந்து வடியப் பெற்று இனி எப்படியாகி முடியுமோ? எ - று.

     (வி - ம்.) வாங்கிய கதிர் - நீண்டு பறிந்த கதிருமாம். குற்ற பறித்த. கள வொழுக்கம் அன்னையறியின் ஒறுப்ப. அதனாலே தலைவி அழுது இறந்துபடு மென்பது.

     உள்ளுறை:- தினைக்கதிர் உண்ணுங்கிளி கொய்து கொண்டுபோகலான் அக் கிளிக்குப் பயன்படு மஃதன்றித் தான் விளைந்த கொல்லைக்குப் பயன்படாதன்றே, அவ்வாறே இவளும் நலனுகருகின்ற நினக்குப் பயன்படுவ தன்றிப் பிறந்த இல்லகத்துக்கு யாதும் பயன்படுவதின்மையின், நீ வரைந்துகொண்டு செல்க வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) தோட்டினின்றும் தலைவளைந்து பக்குவமுற்றவுடன் பசிய கிளி கவர்ந்துகொண்டு போவது போல் நீயும் தமரினின்றும் வேறுபட்டு நின்பகுதியளாகிவிட்ட தலைவியை வரைந்துகொடு நின் மனைக்குச் செல்வாயாக என்பது உள்ளுறை என்க. வற்புறுத்தற்பொருட்டு அன்புறுதகுந இறைச்சியிற் சுட்டுவாள் உயர்வரை நாட என்று விளித்தாள்.

(317)
  
    திணை : பாலை.

     துறை : இது, பிரிவுணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.

     (து - ம்,) என்பது, களவொழுக்கத்துக் கொண்டுதலைக்கழிந்து தன்மனை வரைந்துகொண்ட தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் தோழிக் குணர்த்த அவள் 'ஐயனே! அன்று நாம் ஓமை நிழலிலிருக்கும் பொழுது களிற்றியானை பிளிற்றியதை வேறாக வுணர்ந்து பிடியானை புலம்பிய குரலை நினைத்தலுஞ் செய்வீரோ? அந் நெறியில் எங்ஙனஞ் செல்வீ''ரென்பாள் போன்று பிரிவினாலே தலைவிபடுந் துன்பத்தைக் குறிப்பித்து மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங் காலை எதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
நினைத்தலும் நினைதிரோ ஐய அன்றுநாம் 
    
1 பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த 
  
 (பாடம்) 1. 
பனைத்தாள் ஓமை.