பக்கம் எண் :


542


    திணை : நெய்தல்.

     துறை : இது, காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.

     (து - ம்,) என்பது, களவொழுக்கம் புலப்படக் கண்டு தலைவியை இல்வயிற் செறித்துக் காவலோம்பலும் ஆங்குவந்த தலைமகன் அதனையறிந்து ஆற்றானாகித் தலைவியை நினைந்து 'இத்தகைய நடுயாமத்து இவளுடைய முயக்கத்தைக் கருதி யான் துயிலுகின்றிலேன்; இனி என்நிலை யாதாய் முடியுமோ' என நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, 'பரிவுற்று மெலியினும்' (தொல். கள. 12) என்னும் விதிகொள்க.

    
ஓதமும் ஒலிஓ வின்றே ஊதையுந் 
    
தாதுளர் கானல் தௌவென் றன்றே 
    
மணல்மலி மூதூர் அகல்நெடுந் தெருவின் 
    
கூகைச் சேவல் குராலோடு ஏறி 
5
ஆரிருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் 
    
அணங்குகால் கிளரும் மயங்கிருள் நடுநாள் 
    
பாவை அன்ன பலராய் வனப்பின் 
    
தடமென் பணைத்தோள் மடமிகு குறுமகள் 
    
சுணங்கணி வனமுலை முயங்கல் உள்ளி 
10
மீன்கண் துஞ்சும் பொழுதும் 
    
1 யான்கண் துஞ்சிலேன் யாதுகொல் நிலையே. 

     (சொ - ள்.) ஓதமும் ஒலி ஓவின்று - கடலும் ஒலியடங்கி விட்டதே! ஊதை தாது உளர் கானலும் 'தௌ' என்றன்று - ஊதைக்காற்று மகரந்தத்தைக் கிண்டுகின்ற கழிக்கரைச் சோலையும் பொலிவு அழிந்ததே!; மணல் மலி மூதூர் அகல் நெடுந்தெருவின் கூகைச் சேவல் குராலோடு ஏறி ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் - மணல் மிக்க இம் மூதூரின்கண் உள்ள அகன்ற நெடிய தெருவிலே கூகையின் சேவல் அதன் பெண் பறவையொடு சென்று மக்கள் இயங்காத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் யாவர்க்கும் அச்சமுண்டாகும்படி குழறா நிற்கும்; அணங்கு கால் கிளரும் - பேய்களும் வெளிப்பட்டு உலவாநிற்கும்; மயங்கு இருள் நடுநாள் - ஒருவரையொருவர் அறிதற்கியலாது மயங்கிய அத்தகைய இரவு நடுயாமத்தில்; பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் தட மெல்பணைத் தோள் மடம் மிகு குறுமகள் - கொல்லிப் பாவைபோன்ற பலரும் ஆராயும் அழகையும் அகன்ற

  
 (பாடம்) 1. 
யான் கண்துஞ்சேன்.