(து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் அவளை நீங்கிப் புதிய ஒரு பரத்தையிடம் புகுந்ததனாலே, அதனை யறிந்த முதற்பரத்தை சினந்து தனக்குப் பாங்காயினார்க்குச் சொல்லுவாள் போல, இறைமகன் கேட்கும் வண்ணம் நெருங்கி நின்று 'திருவிழாவு மில்லாத இக் காலத்தில் இவனாலே காதலிக்கப்பட்ட இவள் தன்னைப் புனைந்து கொண்டு தெருவிலே சென்றதற்கு ஊரொருங்கு நகை செய்ததன்றிக் குலமடமாதரும் தம்தம் கொழுநரைக் காத்துக்கொண்டனர;் அங்ஙனமாக இவனை இவள் பற்றிக்கொண்டது அரிதொன்று அன்'றென இகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்" (தொல். கற். 10) என்னும் விதிகொள்க.
| விழவும் உழந்தன்று முழவுந் தூங்கின்று |
| எவன்குறித் தனள்கொல் என்றி யாயின் |
| தழையணிந்து அலமரும் அல்குல் தெருவின் |