பக்கம் எண் :


545


ஆயிற்று. மெய்ப்பாடு - வெகுளி. பயன் - விருந்தின் பரத்தையைப் பழித்தல்.

     (பெரு - ரை.) இனி இச் செய்யுட்கு: பரத்தை தன் தோழியை நோக்கித் தோழீ! இப்பொழுது விழவும் இல்லை முழவும் ஒலித்திலது தழை யணிந்து அலமரும் அல்குலையுடையாள் ஈண்டு யாது குறித்து வருகின்றனள்! என்று வினவுகின்றனை. கூறுவன்கேள்! இவள் ஒருநாள் தெருவிற் சென்றமைக்கே மகளிர் தங் கொழுநரைக் காத்துக் கொண்டனர். ஆதலால் இவள் இப்பொழுது தனக்கு வேண்டிய காமுகக் கயவர் கிடைக்கப் பெறாமையால் அவரைத் தேடித் திரிகின்றாள் காண்!' எனப் பொருள் கோடல் கூடும். இவள் காமுகரைத் தேடித் திரிகின்றாள் என்பது குறிப்பெச்சம் என்க. இதனால் தலைவனையும் அவன் புதிய பரத்தையையும் ஒரு சேரக் குறிப்பாக இகழ்ந்தாளாதல் காண்க. 'விழவும் மூழ்த்தன்று' பாடம்.

(320)
  
மள்ளனார்
     திணை : முல்லை.

     துறை : இது, வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, வினைவயிற்சென்று மீளுந் தலைமகன் தேர்ப்பாகனை நோக்கி நம் காதலி மாலைப்பொழுது நாமில்லாத வறுமனையை நோக்கி வருந்தாநிற்பளோ? விரைவில் நினது தேரைச் செலுத்துவாயாக: காட்டின்கண்ணே நெருங்குதலும் எம்மூர் மரங்கள் தோன்றா நிற்பன காண் என உவந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை 
    
பாடின் றெண்மணித் தோடுதலைப் பெயரக் 
    
கான முல்லைக் கயவாய் அலரி 
    
பார்ப்பன மகளிர் சாரற்புறத்து அணியக் 
5
கல்சுடர் சேருங் கதிர்மாய் மாலைப் 
    
புல்லென் வறுமனை நோக்கி மெல்ல 
    
வருந்துங் கொல்லோ திருந்திழை அரிவை 
    
வல்லைக் கடவுமதி தேரே சென்றிக 
    
குருந்தவிழ் குறும்பொறை பயிற்றப் 
10
பெருங்கலி மூதூர் மரந்தோன் றும்மே. 

     (சொ - ள்.) திருந்து இழை அரிவை - திருத்தமாகச் செய்த கலன் அணிந்த என் காதலி; செந் நிலப் புறவின் புன்மயிர்ப்