(து - ம்,) என்பது, வெளிப்படை.
(உரை இரண்டற்குமொக்கும்.)(இ - ம்.) இதற்கு, "வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| ஆங்ஙனந் தணிகுவது ஆயின் யாங்கும் |
| இதனிற் கொடியது பிறிதொன் றில்லை |
| வாய்கொல் வாழி தோழி வேயுயர்ந்து |
| எறிந்துசெறித் தன்ன பிணங்கரில் விடர்முகை |
5 | ஊன்தின் பிணவின் உட்குபசி களைஇயர் |
| ஆளியங்கு அரும்புழை ஒற்றி வாள்வரிக் |
| கடுங்கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் |
| தண்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது |
| நன்னுதற் பசந்த படர்மலி அருநோய் |
10 | அணங்கென உணரக் கூறி வேலன் |
| இன்னியங் கறங்கப் பாடிப் |
| பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; வேய் உயர்ந்து எறிந்து செறித்துஅன்ன பிணங்கு அரில் விடர் முகை - மூங்கில் உயர்ந்து வளரப்பெற்று இடையே வெட்டி நெருக்கி வைத்தாற்போன்ற பின்னிய புதர்களையுடைய மலைப் பிளப்பை அடுத்த துறுகல்லிடத்து; ஊன் தின் பிணவின் உட்கு பசி களைஇயர் - ஊனைத் தின்னுகின்ற பெண்புலிக்கு உளதாகிய அஞ்சத்தக்க பசிையைப் போக்க வேண்டி; ஆள் இயங்கு அரும்புழை ஒற்றி வாள் வரிக் கடுங் கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் - மக்கள் இயங்குகின்ற நுழைதற்கரிய சிறுவழியை யடுத்து வாள் போன்ற கோடுகளையும் கொடிய கண்ணையுமுடைய வலிய ஆண்புலி பதுங்கியிருக்கும் மலைநாடனது; தண் கமழ் வியன்