(து - ம்,) என்பது, தலைவன்பால் காமவேட்கை மிக்கதனாலாகிய மிகக் கருதிய சொல் மேம்பட்ட தலைமகள் 'திங்கள் விளங்குகின்றது; கடல் ஓசை யடங்கியது இல்லை; அன்றிலும் ஒலியா நிற்கும்; யாழும் யான் உய்யாதபடி இசையாநின்றது; அவற்றைக் கேட்டலானே எனக்குண்டாகிய காமமோ பெரியதாய் இராநின்றது; இதனை ஒழிக்க வல்ல காதலர் அருகிலில்லாது ஒழிந்தனர்; இனி யான் எவ்வாறு உய்வே'னென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| திங்களுந் திகழ்வான் ஏர்தரும் இளநீர்ப் |
| பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே |
| ஒலிசிறந்து ஓதமும் பெயரும் மலிபுனல் |
| பல்பூங் கானல் முள்ளிலைத் தாழை |
5 | சோறுசொரி குடவயின் கூம்புமுகை அவிழ |
| வளிபரந்து ஊட்டும் விளிவில் நாற்றமொடு |
| மையிரும் பனைமிசைப் பைதல உயவும் |
| அன்றிலும் என்புற நரலும் அன்றி |
| விரல்கவர்ந்து உழந்த கவர்வின் நல்யாழ் |
10 | யாமம் உய்யாமை நின்றது |
| காமம் பெரிதே களைஞரோ இலரே. |
(சொ - ள்.) திங்களும் திகழ் வான் ஏர் தரும் - திங்களும் விளங்கிய விசும்பின்கண்ணே எழுந்து தோன்றாநிற்கும்; இளநீர்ப் பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாது - மெல்லிய நீர்மையிற் பொங்கி எழுகின்ற அலையையுடைய கடலும் ஒலி அடங்கியதில்லை;