பக்கம் எண் :


575


இவ் வேறுபாடெய்தியது எதனாலென்றலும் சுனையாடியதனால் உண்டாகிய தென்றேன்; அது மிகை என்று கொண்டு நாளை அதனிலாடின் இன்னும் எவ்வாறாகுமோ என்றனளாதலின், நம் காதலர் பிரிதலால் நாம் வருந்துகின்றோ மென்பதை அவள் அறிந்தனள் போலு'மென்று சூழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
தோலாக் காதலர் துறந்துநம் அருளார்  
    
1 அலர்வது அன்றுகொல் இதுவென்று நன்றும் 
    
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி 
    
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் 
5
அறிந்தனள் போலும் அன்னை சிறந்த 
    
சீர்கெழு வியன்நகர் வருவனள் முயங்கி 
    
நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல் 
    
ஒண்ணுதல் பெதும்பை நல்நலம் பெறீஇ 
    
மின்நேர் ஓதி இவளொடும் நாளைப் 
10
பன்மலர் கஞலிய வெறிகமழ் வேலித் 
    
தெண்ணீர் மணிச்சுனை ஆடின் 
    
என்னோ மகளிர்தம் பண்பென் றோளே. 

     (சொ - ள்.) அன்னை சிறந்த சீர் கெழு வியன் நகர் வருவனள் முயங்கி - தோழீ! அன்னையானவள் சிறந்த அழகு விளங்கிய அகன்ற நமது மாளிகையின்கண்ணே இன்று வந்தனள், அங்ஙனம் வந்தவள் அன்போடு தழுவி மகிழ்ந்து ("நின் தோழி சூடிய மாலை கலைந்து தோற்றப் பொலிவும் வேறுபட்டிருப்பதன் காரணந்தான் யாது?" என வினவ; யானும் என்னோடு இவள் இன்று சுனையாடினள் ஆதலின் இ்வ் வேறுபாடுகள் உண்டாயின என்று கூறினேனாக; அவற்றை வேறாகக் கொண்டு சுனையாடும் பொழுது;) நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் ஒள் நுதல் - நீர் மோதி அலைத்தலானே கலைந்து போகிய குளிர்ச்சியுற்ற மலர்மாலையையும் ஒள்ளிய நுதலையுமுடைய; பெதும்பை நல் நலம் பெறீஇ ஓதி மின் நேர் இவளொடும் - பெதும்பைப் பருவத்தின் நல்ல நலனைப் பெற்றுக் கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவளுடனே; நாளைப் பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் தெள் நீர் மணிச் சுனை ஆடின் - நாளைப் பொழுதிலே பலவாகிய மலர் விளங்கிய மணங் கமழ்கின்ற மருத வைப்புப் போன்ற தெளிந்த நீரையுடைய அழகிய சுனையிடத்து ஆடினால்; மகளிர்தம் பண்பு என்னோ என்றோள் - மகளிர் மேனியின்

  
 (பாடம்) 1. 
ஆவது அன்று கொல்.