பக்கம் எண் :


578


    (வி - ம்.)ஏனை ஊர்களினுஞ் சிறந்த சிறுகுடி போன்ற மகளிரிற் சிறந்த எனது வளையென்க. இதனால் இத்துணைச் சிறப்பு வாய்ந்த காதலியைக் கைவிட்ட கொடுமையுடையை யெனவுங் குறிப்பித்ததாம்.

    உள்ளுறை :- குளத்தை யுடைத்துப் புறப்பட்டுக் கால்வாய் வழியே சென்ற வாளை, கழனியு ளோடிச் சேறு புறந்தீற்றப் பெற்று ஆங்கு உழவர் புடைத்தற்கும் அஞ்சாது செருக்கி வரம்படியிலே சென்று புரளுமென்றது, மனையகத்தை விட்டுப் புறப்பட்ட நீ பாணன் செலுத்தும் வழியே சென்று ஒரு பரத்தையுட் புகுந்து அதனை யறிந்த ஏனையோர் கூறும் பழிமொழியை ஏறட்டுக்கொண்டு அங்குத் தங்கிய வழி ஏனைப் பலபல பரத்தையரும் நின்னை விரும்பியீர்ப்ப அவர்மாட்டுச் செல்லாது ஒருத்தியில்லத்துக்கிடந்து துயின்று வந்தனை என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி பற்றிய உவகை. பயன் - ஊடல் தீர்ந்து முயங்கல்.

    (பெரு - ரை.) கால் - வாய்க்கால். கணை - திரட்சி. அள்ளல் - சேறு. பகடு - எருமைக்கடா. மதரி - செருக்கி. அணை - மடையுமாம். ஐம்புலவின்பத்திற்கும் நிலைக்களனாதலோடு அறநிகழ்த்தற்கு இடனாதலும் பற்றி பாணன் சிறுகுடியைத் தன்னோடு ஒப்பித்துக் கொண்டாள் என்க.

(340)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.

    (து - ம்.) என்பது, பகைமேற் சென்று முனையிடத்துப் பாசறைக் கண் உள்ளானாகிய தலைமகன் அயலிலொரு குன்றின்மேல் ஓராடவனும் அவன் காதலியும் விளையாடுவதனை நோக்கி 'இம் மடந்தை தன் காதலனொடு சிறிய நொடிபயிற்றி மகிழா நிற்கும்; இங்ஙனம் எம் காதலி ஆற்றி மகிழ இடனின்றி யாம் பாசறையின்கண் இராநின்றேமென்று புலம்பா நிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பாசறைப் புலம்பலும்" (தொல். அகத். 41) என்னும் விதிகொள்க.

    
வங்கவரிப் பாறைச் சிறுபாடு முணையின்  
    
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும் 
    
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து 
    
உலையா உலவை ஒச்சிச்சில கிளையாக் 
5
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் 
    
துணைநன் குடையள் மடந்தை யாமே 
    
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென 
    
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு 
    
வேறுபுல வாடை அலைப்பத் 
10
துணையிலேம் தமியேம் பாசறை யேமே.