பக்கம் எண் :


584


தடைஇய பெரும்புனம் - பெரிய பிடியானையின் நெடிய கைபோல வளைந்துடைய பெரிய கொல்லையை; காவல் கண்ணினம் ஆயின் - நாம் நாளை முதலாகக் காவல் செய்யக் கருதினேமாயின்; செல்வன் நம் நிலை இடை தெரிந்து உணரான் - நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்தறியானாய்; தன் மலை ஆரம் நீவிய அணிகிளர் ஆகம் வண்டு சால ஆர்ப்ப - தன் மலையிலுள்ள சந்தனத்தைப் பூசிய அழகு விளங்கிய மார்பில் வண்டுகள் மொய்த்துப் பெரிதும் ஆரவாரிப்ப; உயர் வரைப் பெருங் கல்விடர் அகம் சிலம்ப - உயர்ந்த மூங்கிலையுடைய பெரிய மலையகத்துள்ள பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; இரும்புலி களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து - கரிய புலி களிற்றியானையைத் தொலைத்து முழங்கும் பெரிய பூசலைக் கேட்டு இது முகிலின் இடிமுழக்கமாமென்று எண்ணி; செந்தினை உணங்கல் தொகுக்கும் - சிவந்த தினை புலருமாறு போகடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்ற; இன் கல் யாணர் தான் - இனிய மலையிலுள்ள புது வருவாயினையுடைய தான்; சாரல் நீள் இடைத் தம் உறைவின் ஊர்க்குச் செல்லும் கொல் - சாரலின் நெடிய வழியிலே தமரோடு உறையும் தன் ஊர்க்குச் செல்லுவான் கொல்லோ? எ - று.

     (வி - ம்.)தடைஇய - வளைந்த, காவல் கண்ணினம் ஆயினென்றது அவன்பால் அன்புடைமையையும் அவன் இன்றியமையாமையையுங் குறித்து நின்றது.

     உள்ளுறை :-யானையைப் புலி அடித்து முழங்கிய முழக்கத்தை மேகமுழக்கமெனத் திரியவுணர்ந்து புலர்த்திய தினையைக் குவிக்குமென்றது, தலைவனை ஊரார் வரவொட்டாதபடி அலரெடுத்ததை அன்னை கட்டினாலுங் கழங்கினாலுந் திரியவுணர்ந்து தினைகாத்திருந்த தலைவியைக் காவலொருவி இல்வயி னெடுத்த வெறிக்களத்துக் கொண்டுபோகா நிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) ஐது - வியப்புடையது. கண்ணினம் - கருதினேம். சால - மிகுதியாக, செல்வன் சாரல் நீளிடைத் தன்னூர்க்குச் செல்லுங் கொல் என இயைக்க. தினையாகிய உணங்கல் என்க.

(344)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, தெளிவிடை விலக்கியது.

     (து - ம்.)என்பது, பிரிவிடை யாற்றாத தலைவியைத் தலைமகன் நெருங்கி, 'யான் கடிதிலே வரைந்துகொள்வேன்; அதுகாறும் ஆற்றியிருப்பாயாக" என்று கூறப் புகுதலும் அதனையறிந்த தோழி, துறைவனே! நின் போன்ற சான்றோர் தம்மை யடைந்தார் வாடும்படி