(து - ம்.)என்பது, களவொழுக்கத்துப் பாங்கி மதியுடன்பாட்டின்கண் முன்னுறன் முதலாகிய மூவகையானும் தோழி மதியுடன்படுக்கின்றாள்; இவன் ஒரு குறையுடையான்போலும். அக் குறையும் இவள்கண்ணதேயென ஆராயுங்காலை அதுகாறும் பொறானாய் அவள் அறிந்து தன் குறையை விரைவிலே முடிக்குமாறு யாம் கொய்தும் தூக்கியும் குற்றும் நாள்தோறும் இவ்வண்ணம் குற்றேவன்மாக்கள் போலா யிருப்பவும் பின்நிற்றலை வெறாத நம்பால் பரதவர்மகள் எவ்வாறு கருதியிருக்குமோ என்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஊரும் பெயரும் . . . . தோழியைக் குறையுறும் பகுதியும்" (தொல். கள. 11) என்பதனால் அமைத்துக் கொள்க.