பக்கம் எண் :


592


     தன் செல்வமிகுதி அறிவுறுத்துவான் தேரிலேறிப் போந்தமை கூறினான். தான் வந்தது ஆங்குப் புறத்தார்க்குப் புலனாகாதென்பதை அறிவுறுத்துவான் காலினால் நடந்து போந்தமையாற் கூறினான். தனது தேரை நிலவுமணற் கான்யாற்றின் நிற்கப்பணித்து வந்தனனென்றவாறு. மலர்கொய்தன் முதலாயினவற்றால் தன் பெருமைக்கு ஏலாச் சிறுதொழிலாகிய தன் பணிவுடைமை கூறினான். தலைவி தன்நிமித்தம் இவள்பால் எம்பெருமான் இனி வந்தொழுகுவன் போலுமென்று கருதுவள் கொலென்பான் என் என நினையுங்கொல் என்றான். மெய்ப்பாடு - தன்கண் தோன்றிய பிணிபற்றிய இளிவரல். பயன் - தோழி கேட்டுக் குறைமுடிப்பாளாவது.

     (பெரு - ரை.) பெரும்புண்ணுறுநர் உயிர்போகாமையின் பேஎய் அணுக அஞ்சியும் அகல மனமின்றியும் நிற்றல்போல எனினுமாம். செய்தார் : வினைத்தொகை.

(349)
  
     திணை : மருதம்.

     துறை : இது, தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்து ஆற்றாமை வாயிலாகப் புகுந்து பள்ளியிடத்தானாகிய தலைமகனைத் தலைமகள் நெருங்கி ஊடல் தீர்கின்றாள், ஊரனே! எனது நலன்முழுவதுந் தொலையினும், என்னை நீ நெருங்க விடேன்; நெருங்க விடுவேனாயின் என்வரைத்தன்றி என்கை நின்னை அணைத்து முயங்காநிற்கும்; சார்ந்த முதலாயின உடையையாதலின் நின்னை நீக்குவது கலங்கழிப்பது போலாம்; அதனால் இங்கு வாராதேகொள்; நின்னொடு அப் பரத்தை நீடுவாழ்வாளாக என வெகுண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு,

  
"புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு 
  
 அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி 
  
 இயன்ற நெஞ்சந் தலைபெயத் தருக்கி 
  
 யெதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்"     (தொல். கற். 6)  

என்னும் விதிகொள்க.

    
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் 
    
பழனப் பல்புள் இரியக் கழனி 
    
வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிருந் 
    
தேர்வண் விராஅன் இருப்பை அன்னஎன் 
5
தொல்கவின் தொலையினுந் தொலைக சார 
    
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇக 
    
கவவுக்கை தாங்கும் மதுகையம் குவவுமுலை