பக்கம் எண் :


593


    
சாடிய சாந்தினை வாடிய கோதையை 
    
ஆகில் கலங்கழீஇ அற்று 
5
வாரல் வாழிய கவைஇநின் றோளே. 

     (சொ - ள்.) வெள் நெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல் புள் இரிய - வெள்ளிய நெற்கதிரை அறுக்கும் மள்ளர் முழங்குகின்ற தண்ணுமைக்கு அஞ்சி வயலிலுள்ள பலவாகிய புள்ளினமெல்லாம் இரிந்தோடிச் செறிதலால்; கழனி வாங்குசினை மருதம் தூங்கு துணர் உதிரும் - வயலின்மீது தாழ்ந்து வளைந்த கிளையையுடைய மருதமரத்தே தூங்குகின்ற பூங்கொத்துகள் உதிராநிற்கும்; தேர் வண் விராஅன் இருப்பை அன்ன - இரவலர்க்குத் தேர் கொடுக்கும் வண்மையுடைய (விராஅன்) என்னும் கொடைவள்ளலின் 'இருப்பையூர்' போன்ற; என் தொல் கவின் தொலையினும் தொலைக - எனது பழைய அழகெல்லாம் கெடுவதாயினுங் கெடுக; சார விடேஎன் விடுக்குவென் ஆயின் - என்னருகில் நீ நெருங்குமாறு விடுவேனல்லேன் அங்ஙனம் விடுகிற்பேனாயின்; கடைஇக் கவவுக் கை தாங்கும் - என்வாயினால் நின்னை விலக்கப்பட்டும் என் அகத்திடுகைகள் நின்னை வல்லே அணைத்து முயங்காநிற்கும்; மதுகை அம் குவவு முலை சாடிய சாந்தினை வாடிய கோதையை - நீதானும் வலிமையுடைய குவிந்த பரத்தையின் கொங்கையினாலே சாடப்பட்ட சந்தனத்தையுடைய அவள் குழைய முயங்கலாலே துவண்டு வாடிய மாலையையுடையை; ஆகில் கலம் கழீஇ அற்று - ஆதலால் நின்னைத் தீண்டுதல் கலங்கழித் தெறிந்த தாழி முதலியவற்றைத் தீண்டிய அத்தன்மையதாகும்; வாரல் நின் தோள் கவைஇ வாழிய - அதனால் என் மனையின்கண்ணே வாராதே கொள்; நின்னை அணைத்து முயங்கி அப் பரத்தை நின்னொடு நெடுங்காலம் வாழ்வாளாக! எ - று.

    (வி - ம்) கடைஇ - விலக்கி; இதனை விலக்கவெனத் திரிக்க.

     அவன்பால் வைத்திருந்த அன்பின்மிகுதியை அறிவுறுத்துவான் காண்டலும் கைகள் நின்னை அணைத்து முயங்கு மென்றாள்.

     உள்ளுறை :-மள்ளர் தண்ணுமைக்கு அஞ்சிப் புள்ளினம் இரிந்தோடி மருதிற் செறிதலானே அம் மருதங்கிளை அசைந்து பூங்கொத்துகள் உதிரா நிற்குமென்றது, என்பால் உனக்கு அன்பின்றி ஏதிலார் கூறும் பழிமொழியை அஞ்சி நீ இங்கு வருதலால் என்னுள்ளம் நின்னை வெறுத்தொழியாநிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி, பயன் - ஊடல் நீங்குதல்.

     (பெரு - ரை.) 'ஆசில் கலந் தழீஇயற்று' என்றும் பாடம், நின்றோள் பரத்தையை முயங்கி வாழிய எனினுமாம்.

(350)