பக்கம் எண் :


606


     (து - ம்.)என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.

    
பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச்  
    
சிறுமெல் ஆகம் பெரும்பசப்பு ஊர 
    
இன்னேம் ஆக எற்கண்டு நாணி 
    
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் 
5
அணங்கல் ஓம்புமதி வாழிய நீயெனக் 
    
கணங்கெழு கடவுட்கு உயர்பலி தூஉய்ப் 
    
பரவினம் வருகஞ் சென்மோ தோழி 
    
பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல் 
    
சிறுவெண் காக்கை நாளிரை பெறூஉம் 
10
பசும்பூண் வழுதி மருங்கை அன்னஎன் 
    
அரும்பெறல் ஆய்கவின் தொலையப் 
    
பிரிந்தாண்டு உறைதல் வல்லி யோரே.  

     (சொ - ள்.) தோழி பெருஞ் சேய் துய்த்தலை இறவின் முடங்கல் - தோழீ! பெரிய செவ்விய பஞ்சுபோன்ற தலையையுடைய இறாவின் முடங்கலை; சிறு வெண் காக்கை நாள் இரைபெறூஉம் பசும்பூண் வழுதி மருங்கை அன்ன - சிறிய வெளிய காக்கை நாட்காலையில் இரையாகப் பெறுகின்ற பசிய பூணை அணிந்த பாண்டியனது மருங்கூர் போன்ற; என் அரும் பெறல் ஆய்கவின் தொலைய - எனது அரிதாகப் பெற்ற நுண்ணிய அழகெல்லாம் கெடும்படியாக; பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோர் - என்னைப்பிரிந்து அங்கே தங்குதற்கு வல்ல தலைவர்; பெருந்தோள் நெகிழ அவ் வரி வாடச் சிறு மெல்ஆகம் பெரும்பசப்பு ஊர - முன்னொருபொழுது நம்முடைய பெரிய தோள் தளர்வடைய அழகிய வரி (இரேகை)கள் வாட்டமுறச் சிறிய மெல்லிய கொங்கைகளிலே பெரிய பசலை பரவ; இன்னேம் ஆக என் கண்டு நாணி - நாம் இத் தன்மையேமாதலும் அவர் தம் காதலியைப் பிரிதலால் இவ்வண்ணம் ஆயினாள் என்று என்னைக் கண்டு வெட்கமுற்று; நின்னொடு தெளித்தனர் ஆயினும் - தெய்வத்தை முன்னிலைப் படுத்தி இனி ஒருபொழுதேனும் பிரியேனென்று நின்னுடனே சூளுற்றனராயினும் அங்ஙனம் கூறிய சூள் பொய்த்தலானே அதுகாரணமாக; என்னதூஉம் அணங்கல் ஓம்பு நீ வாழிய என - எவ்வளவேனும் அவரை வருத்தாதேகொள்! அவரைப் பாதுகாப்பாயாக! நீ வாழிய என்று; கணம் கெழு கடவுட்கு உயர் பலி