(து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைவன் கொடுத்த கையுறையை ஏற்றுத் தலைவியிடஞ் சென்று அவள் கருத்து நாண முதலாய மேற்கொண்டதனால் வேறுபட்டிருப்பது அறிந்த தோழி, 'இன்று தலைமகன் தழை தந்தனன;் அவற்றை யுடுத்தால் அன்னை முனியுமென் றஞ்சுதும்; வேண்டா வென்று தழையை மறுத்தால் அவனது ஆற்றாமை கண்டஞ்சுதும்; இடையே அத் தழை வாடவேண்டுவபோலு' மென்று அவள் குறிப்பின்வழி ஒழுகுவாள் போன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "குறைந்து அவட் படரினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா |
| அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக் |
| கன்றுதாய் மருளுங் குன்ற நாடன் |
| உடுக்குந் தழைதந் தனனே அவையாம் |
5 | உடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பின் |
| கேளுடைக் கேடஞ் சுதுமே ஆயிடை |
| வாடல கொல்லோ தாமே 1அவன்மலைப் |