பக்கம் எண் :


616


வாயினும்; ஊழின் உரும் மிசை அறியாச் செயிர்தீர் மாரியொடு - முறையே இடிமுழக்கம் விசும்பிலே கேட்கப்படாத குற்றந் தீர்ந்த மாரியுடனே; சிறு செந் நாவின் மணிஈர் இன் குரல் - வல்லோசை பயின்றறியாத சிறிய செவ்விய நாவினையுடைய மணியின் குளிர்ந்த இனிய ஓசை; ஊர் நனி இயம்ப - ஊரின்கண்ணே புகுந்து மிக ஒலியாநிற்கும்படி; பல் ஆ தந்த கல்லாக் கோவலர் - பலவாய ஆனிரையை நமது தெருவிலே செலுத்திவந்த பிறதொழிலைக் கல்லாத ஆயருடைய; கொன்றை அம் தீம் குழல் - கொன்றைப் பழத்தால் செய்த இனிய புல்லாங் குழல்; மன்று தோறும் இயம்ப - இவ்விடனெங்கும் இனிதாக ஒலியாநிற்ப; உயிர் செலத் துனைதரு மாலை - பிரிந்தோரின் உயிர் உடனே உடலை விட்டு நீங்கும்படி விரைந்து வருகின்ற மாலைப் பொழுதானது; ஒருங்கு தலைவரின் - ஒருசேர வந்து கூடினால்; பல்நாள் வாழலேன் - அப்பால் எந்த நாளும் நான் உயிர் வாழ்ந்திரேன் காண்; எ - று.

     (வி - ம்.) "மாலையோ வல்லை மணந்தார் உயிருண்ணும், வேலைநீ வாழி பொழுது" (குறள் - 1221) என்றதனானும் பிரிந்தோருயிரை மாலை ஒறுக்குமென்றறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) ஊர் நணியியம்ப என்றும் பாடம். உருமிசையறியா என்னுந் தொடர்க்கு உரை பொருந்திற்றில்லை. வேறு பாடமிருந்திருத்தல் கூடும்.

(364)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து இன்னது செய்து மென்பாளாய்ச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, களவின்வழிவந் தொழுகுந் தலைமகன் ஒருசிறை மறைந்து வந்துறைவதனை யறிந்த தோழி, அவன் இதுகேட்டு விரைய வரையுமாறு தலைவியை நெருங்கி அவனது இயல்பை இகழ்கின்றாள், தோழியே! மலைநாடன் சான்றோனல்ல னாதலால் அவனெதிர் சென்று நீ சான்றோயல்லை என்று கூறி வரவேண்டி யாம் நாணமொழிந்து மன்றிலே புகுந்து அவனது ஊரை வினாவி வருவோமோ ஒன்று சொல்லாயென்று கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.