பக்கம் எண் :


619


போன்ற கூந்தலை மாசுநீங்கத் தூய்மை செய்து விளக்கி; கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த - குளிர் காற்றால் மலருகின்ற முல்லையின் குறுகிய காம்பையுடைய மலர்களை இளைய பெண் வண்டுடனே ஆண் வண்டுஞ் சூழுமாறு முடித்திருக்கின்ற; இரும் பல் மெல் அணை ஒழிய - மிகப் பலவாகிய மெல்லிய அக் கூந்தலைணையிலே கிடந்து துயிலுவதனை யொழியவிட்டு; கரும்பின் வேல்போல் வெள்முகை பிரியத் தீண்டி - கரும்பின் வேல் போல்கின்ற வெளியமுகை பிரியும்படி தீண்டி; முதுக்குறை குரீஇ முயன்று செய்குடம்பை மூங்கில் அங்கழை தூங்க ஒற்றும் - அறிவுமிக்க தூக்கணங் குருவி தான் முயன்று செய்த கூட்டினை மூங்கில் தன் அடித்தண்டும் அசையுமாறு மோதுகின்ற; வடபுல வாடைக்குப் பிரிவோர் - வடதிசைக்குரிய வாடைக்காற்று வீசுங்கூதிர்ப் பருவத்திலே பிரிபவர்; இவ்வுலகத்தான் மடவர் - இவ்வுலகத்திலே அறியாமை மிக்குடையராவார், எ - று.

     (வி - ம்.) முதுக்குறைவு - பேரறிவு. அரவுசீறியெழுந்தாற் போன்ற அல்குல், நுண்ணிய வெளிய துகிலையுடுத்தவழி அத்துகில் அசையுந்தொறும் உள்ளிருந்து கண் இமைத்தல் போலுதலானே இமைக்குமல்குல் என்றானுமாம்.

     இறைச்சிகள் :- (1) மணமில்லாத கரும்பின்மலரை வாடைதீண்டும் என்றது, நெஞ்சே! நிலையில்லாத பொருளை நீ விரும்பி யுலாவுறுகின்றனை யென்றதாம்.

     இறைச்சிகள் :- (2) வாடை வீசுதலாலே குருவியின் குடம்பை அசைந்து வருமாறு மூங்கில் சென்று மோதுமென்றது, பொருள்நசை நின்னைத் தூண்டுதலானே யான் வருந்துமாறு நீ என்னைத் துன்புறுத்துகின்றதனை யென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய பிணிபற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.

     (பெரு - ரை.) இரும்பல் மெல்லணை - கரிய பலவாகிய மெல்லிய கூந்தலாகிய அணை என்க. "செயற்கரிய செய்வார் பெரியர்" என்பதுபற்றி அரிய கூடியற்றும் குருவியை முதுக்குறைக் குரீஇ என்றான்.

(366)
  
     திணை : முல்லை.

     துறை : இது, வரவுமலிந்தது.

     (து - ம்.) என்பது, வினைவயிற் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்து வந்திலனென்று கவன்ற தலைமகளைத் தோழி நெருங்கி, மடந்தாய்! சென்று வினைமுடித்தமையால் உடன்சென்றிருந்த வீரர் பலரும் மலர்சூடி வந்தனர்காண்; நம் காதலரும் இப் பனிக்காலத்து ஆண்டுத் தங்கி வருந்தாது இன்னே வருவரென்று கூறுபவள் உள்ளுறையால் நீ துன்புறாது இல்லறம் நிகழ்த்துவாயாக வென்றும் ஆராய்ந்து கூறாநிற்பது.