பக்கம் எண் :


62


  
"நேரிழை நல்லாய் நகையா மலைநாடன்  
  
 மார்புதரு வெந்நோய் தீர்க்க வரும்வேலன் 
  
 தீர்க்க வரும்வேலன் தன்னினுந் தான்மடவன் 
  
 கார்க்கடப்பந் தாரெங் கடவுள் வருமாயின்"    (குன்றக்குரவை- 14 14)  

எனவரும் சிலப்பதிகாரப்பகுதி ஒப்புநோக்கற்பாலது.

(34)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, மணமனைப் பிற்றைஞான்று புக்க தோழி நன்காற்றுவித்தாயென்ற தலைமகற்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, வரைந்தபின் மணமனைபுக்க தோழியைப் பிரிவுக்காலத்து நன்காற்றுவித்தாயென்ற தலைமகற்குத் தலைவி பொருட்டு யாய்க்கஞ்சி யொழுகினேனை நீ விரைய வந்து காத்ததன்றியான் ஆற்றுவித்தது முளதோவெனக் கூறுவாள் சிறிது கைநெகிழிற்பண்டும் இத்தன்மையளே யெனப் பிரிவால் தலைவி வருந்துந் தன்மையுஞ் சேரக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்குக் "கற்புங் காமமும். . . . .கிழவோற்குரைத்தல் அகம்புகன் மரபின் வாயில்கட் குரிய" (தொல்-கற்- 11) என்னும் விதி கொள்க,

    
பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப்  
    
புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி  
    
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்  
    
பல்கா லலவன் கொண்டகோட் கூர்ந்து 
5
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 
    
இரைதேர் நாரை யெய்தி விடுக்குந் 
    
துறைகெழு மாந்தை யன்ன இவள்நலம் 
    
பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய 
    
உழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய 
10
ஞெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர் 
    
கட்கழி செருக்கத் தன்ன  
    
காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே. 

    (சொ - ள்.) பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைப் புன் கால் நாவல் பொதிப்புற இருங்கனி - பொங்கி எழுகின்ற அலைமோதிய நேரிதாகிய மணல் அடுத்த கடற்கரையின் கண்ணே உதிர்ந்த புல்லிய காம்பையுடைய நாவலின் களி பொருந்திய புறத்தினையுடைய கரிய கனியை; கிளை செத்து