பக்கம் எண் :


627


     தேயவேறுபாட்டினால் தானிருக்குமிடத் தெய்தாது பருவவரவு தொடங்கியதென அறிவுறுத்துவான். மாயோளிருந்த தேத்து மழை தொடங்கினவென்றான். இது குறித்த பருவத்து எய்தாவிடின் இறந்துபடும் என்று குறிப்பித்தானாயிற்று. பிரிந்துறைவோர்க்குக் குழலோசை இடி ஒக்குமென்றது வெளிப்படை. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - கேட்ட பாகன் தேர் விரைந்துகடாவல்.

     (பெரு - ரை.) காயாங்குன்றம் - காயா மரங்களையுடைய மலை. பெய்யா வானம் என்றது அப்பொழுதே கார்ப்பருவந் தொடங்குதலை உணர்த்தியபடியாம். எனவே யான் குறித்த பருவமும் வந்தது என்றானாயிற்று. கார்ப்பருவத்து மாலையும் வந்தது என்பதுணர்த்துவான் கோவலர் குழல் தொடங்கினர் என்றான்.

(371)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகின்ற தலைமகள் ஆற்றவேண்டி உலகியன்மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியாரெனச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகள் களவின்கண்ணே தன்னை இல்வயிற் செறிப்பரென்று அஞ்சி வருந்தலும் அதுகண்ட தோழி, நீ துறைவன் வந்து முயங்குமாறு விரும்பி வருந்தியதனை இவ்வூர் நோக்கிப் பிறிதொன்றாகக் கருதி அன்னை கொடுத்த கோடு உலைந்ததற்கு வருந்தாதேயென்று கூறாநிற்கும்; ஆதலால் நின்னை இல்வயிற்செறிப்பாரல்லர்; நீ வருந்துவது தகுதியுடையது அன்றென அவள் ஆற்றுமாறு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
அழிதக் கன்றே தோழி கழிசேர்பு 
    
கானல் பெண்ணைத் தேனுடை அழிபழம 
    
வள்ளிதழ் நெய்தல் வருந்த மூக்கிறுபு 
    
அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக் 
5
கிளைக்குருகு இரியுந் துறைவன் வளைக்கோட்டு 
    
அன்ன வெண்மணற்று அகவயின் வேட்ட 
    
அண்ணல் உள்ளமொடு அமர்ந்தினிது நோக்கி 
    
அன்னை தந்த அலங்கல் வான்கோடு 
    
உலைந்தாங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு 
10
இனையல் என்னும் என்ப மனையிருந்து 
    
இருங்கழி துழவும் பனித்தலைப் பரதவர் 
    
திண்திமில் விளக்கம் எண்ணுங்  
    
கண்டல் வேலிக் கழிநல் லூரே.