(து - ம்,) என்பது, தலைமகன் வரையாது பகற்குறிவந் தொழுகுகின்றான் அறிந்து விரைய மணஞ்செய்துகொள்ளுமாறு தோழி தலைவியை நெருங்கி, நம் அன்னை என்னை நோக்கி, நுந்தை வேட்டை மேற் சென்றதனாலே தினைப்புனங்காப்பு நினதேயென்றனள்; அவ்வாறு காவல்செய்யும்பொழுது மலைநாடனொடு தொடர்புற்றோம்; தினைகொய்யுங்காலம் நெருங்கினமையின் அவனோ டுற்ற தொடர்பு தான் யாதாய் முடியுமோ என நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும்..............அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| வேங்கை யும்புலி ஈன்றன அருவியும் |
| தேம்படு நெடுவரை மணியின் மானும |
் | அன்னையும் அமர்ந்துநோக் கினளே என்னையும் |
| களிற்றுமுகந் திறந்த கல்லா விழுத்தொடை |
5 | ஏவல் இளையரொடு மாவழிப் பட்டெனச் |
| சிறுகிளி முரணிய பெருங்குரல் ஏனல் |
| காவல் இனியென் றோளே சேவலொடு |
| சிலம்பில் போகிய சிதர்கால் வாரணம் |
| முதைச்சுவல் கிளைத்த பூழி மிகப்பல |