(து - ம்,) என்பது, தலைமகன் தான் பொருள்வயிற் பிரிவே னென்றதை யறிந்து வருந்திய தலைமகளைத் தோழி நெருங்கி, மடந்தாய்! கண்ணீர் மல்க அழாதே கொள்; நின் காதலர் ஏழில்மலையைப் பெறுவதாயினும் நின்னைப் பிரிபவர் அல்லர்; நீ அழுவதனை அவர் கண்டால் இன்னே செலவழுங்குவரென வலியுறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற் கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.
துறை : (2) வரைவுணர்த்தியதூஉமாம்.
(து - ம்,) என்பது, வெளிப்படை
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதற்கு, "ஆங்கதன் தன்மையின் வன்பொறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே |
| புலிப்பொறி அன்ன புள்ளியம் பொதும்பின் |
| பனிப்பவர் மேய்ந்த மாயிரு மருப்பின் |
| மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை |
5 | ஒண்தொடி மகளிர் இழையணிக் கூட்டும் |
| பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு |
| ஏழிற் குன்றம் பெறினும் பொருள்வயின் |
| யாரோ பிரிகிற் பவரே குவளை |
| நீர்வார் நிகர்மலர் அன்னநின் |
10 | பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே. |
(சொ - ள்.) மடந்தை குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன நின் பேர் அமர் மழைக் கண் தெள் பனி கொளவே ஆழல் - மடந்தாய்! குவளையின் நீர் வடிகின்ற ஒளி பொருந்திய மலர் போன்ற நின்னுடைய பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தெளிந்த நீர் வடியும்படி நீ அழாதேகொள்!; பொருள்வயின் செலவு அழுங்குவர் - அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொணருமாறு செல்லுவதனை இன்னே ஒழிகுவர்காண்; புலிப்பொறி அன்ன புள்ளி அம் பொதும்பில் - புலியினது புள்ளி போன்ற புள்ளிகளமைந்த நிழலையுடைய மரங்கள் செறிதலினிடையே; பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர்தலைக்கார்