பக்கம் எண் :


658


ஆன் - படர்ந்த ஈரிய கொடியை மேய்ந்த நெடிய கரிய கொம்பையும் பருத்த தலையையுமுடைய எருமைமாடு; அகற்றிய தண்ணடை ஒள் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும் - அக்கொடியினின்று தின்றொழித்த மலைப்பச்சையின் இலைகள் ஒள்ளிய தொடியையுடைய மகளிர் கலன்களை அணிதற்குப் பயன்படுமாறு கூட்டாநிற்கும்; கொண்கான நன்னன் நல்நாட்டு பொன்படு ஏழிற் குன்றம் பெறினும் - கொண்கானத்தின்கணுள்ள நன்னனது நல்ல நாட்டிலிருக்கின்ற பொலிவு பொருந்திய ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும்; யார் பிரிகிற்பவர் - நின்னைவிட்டுப் பிரிபவர் யார்? எ - று.

     (வி - ம்.) காரான் - எருமை. தண்ணடை - மலைப்பச்சை. புள்ளி - இலையடராது புள்ளிப்பட்ட நிழல். நிகர் - ஒளி. இழையணிக்கூட்டும் - கலன்களாக அணியும்படி கூட்டாநிற்கும் எனவுமாம்.

     உள்ளுறை:- எருமை தின்றொழித்த மலைப்பச்சை மாதர் இழையணியாகக் கூட்டுமென்றது, அவர் ஈட்டிக் கொணர நீ இல்லறம் நிகழ்த்தி எஞ்சிய பொருள் உலகத்துக்குப் பயன்படுங்கா ணென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) பொருள்வயின் செலவு என்றும், 'பொன் படு ஏழிற் குன்றம்' என்றும் இயைத்துக்கொள்க. ஏழிற்குன்றம் என்பது கொண்கானத்துள்ள ஒரு மலையின் பெயர் என்க.

     உள்ளுறையால் பொருள் இன்றியமையாமை யுணர்த்தி நீ செலவுடன்படுதலே அறிவுடைமையாம், அழல் அறிவாகாது என்றாளாயிற்று. நிகர்மலர் - ஒளியையுடைய மலர்.

(391)
  
     திணை : நெய்தல்.

     துறை : (1) இஃது, இரவுக்குறி முகம்புக்கது.

     (து - ம்,) என்பது, தலைமகன் இரவுக்குறி வேண்ட, அதற்கு நேர்ந்த தோழி தலைவிபால் வருதலும் ஆங்கு ஆயம் பல அருகி லியங்குதலானே புலப்படக் கூறாது நம் காதலர் மிக்க அன்பினராதலின் நடுயாமத்து யாம்படுகின்ற துன்பத்தைப் போக்குதலுஞ் செய்வர்; அத்தகையார் இப்பொழுது முன்புற்ற பகற்குறியை வந்து நோக்கி வருந்தியிருக்கின்றனர் போலும்; அவர் நமது மாளிகையை அறிந்திருப்பாராயின் அது மிக்க நலம் எனக் கண்ணாலே குறிப்பாகக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.

     துறை : (2) வரைவுநீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவுணர்த்தி வற்புறுத்தியதூஉமாம்.