(து - ம்.) என்பது, தலைமகன் பகற்குறி வந்தொழுகுநாளுள் ஒருநாள்! யாதோ ஒரு காரணத்தாற் பிரிதலும் வேறுபட்ட தலைவியின் வேறுபாடறிந்த செவிலி அவளை இற்செறித்தபின் மற்றைநாட் குறியிடத்து வந்த தலைவன் தன் நெஞ்சை நோக்கி 'நீ மலைநாடன் மகளை முன்னரே கருதித் துய்த்து மகிழாமல் மனைவயிற்செறிக்கப்பட்ட பின்பு கருதிய நின்னாலோ அவள் அறியத்தக்கவ' ளென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பரிவுற்று மெலியினும்" (தொல்-கள- 11) என்னும் விதிகொள்க.