பக்கம் எண் :


77


நீயிர் பிரிந்து போதலைக் கேட்டவுடன் - 'அஞ்சாதே கொள்' என்ற துணைவயின் வந்த அரசன் கைவிட்டானாக; பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலில் - அப்பொழுது பைங்கண்ணையுடைய யானைப் படையையுடைய பகைவேந்தன் தன் மதிற்புறத்து வந்து தங்கலும்; களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் ஓர் எயில் மன்னன் போல - தனக்கு வந்த துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் கலக்கமுற்ற உறுப்புக்கள் அமைந்த உடைந்த ஒரு மதிலையுடைய அரசனைப் போல; அழிவு வந்தன்று - அழிவு வராநின்றது; ஆதலின் ஏற்றதொன்றனைச் செய்ம்மின்; எ - று.

    (வி - ம்.)உருப்பு - வெப்பம். என்றூழ் - கோடை. ஒய்பசி - நுட்பமாகிய பசி. ஆரிடை - அரிய வழி. ஆகின்று - ஆகிற்று. எயில் - மதிலுறுப்பு; துணையரசன் காதலனாகவும், அவன் கைவிட்டவுடன் பகையரசன் புகுதல், தலைவன் பிரிந்தவுடன் காமந் தலையெடுத்துப் புகுதலாகவும், ஓருடைமதில் ஏனைய கழிந்து எஞ்சிய நாணமொன்றே அதுவுஞ் சிதைந்து நின்றதாகவும், மன்னன் தலைவியாகவும் உவமையும் பொருளு மொத்தவாறறிக.

    இறைச்சி :- செந்நாய்தின்ற மரையாவின் தசை நெறியிற் செல்வோர்க்கு உணவாகுமென்றதனானே, நீயுண்டெஞ்சிய தலைவியினது நலனைப் பசலை யுண்டொழிக்கு மென்றதாம். எனவே முற்பட இறைச்சியாற் பொருள் கொள்ளுமாறு கூறக்கேட்டும் தலைவன் பிரிதலே மேற்கோடலின் வெளிப்படை யுவமத்தானுங் கூறிச் செலவழுங்குவித்தாளாயிற்று. மெய்ப்பாடு - பிறன் கட்டோன்றிய அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.

    (பெரு - ரை.) மெய்ம்மலிதற்குக் காரணமான உவகை உண்டாகா நின்றது எனினுமாம். கலங்கிய மன்னன், ஓரெயில் மன்னன் எனத் தனித்தனி கூட்டுக.

(43)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, இற்செறிப்பிற் பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்துவந்து சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் பகற்குறி வந்தொழுகுநாளுள் ஒருநாள்! யாதோ ஒரு காரணத்தாற் பிரிதலும் வேறுபட்ட தலைவியின் வேறுபாடறிந்த செவிலி அவளை இற்செறித்தபின் மற்றைநாட் குறியிடத்து வந்த தலைவன் தன் நெஞ்சை நோக்கி 'நீ மலைநாடன் மகளை முன்னரே கருதித் துய்த்து மகிழாமல் மனைவயிற்செறிக்கப்பட்ட பின்பு கருதிய நின்னாலோ அவள் அறியத்தக்கவ' ளென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பரிவுற்று மெலியினும்" (தொல்-கள- 11) என்னும் விதிகொள்க.