(து - ம்.) என்பது, பிரிந்து நீட்டித்துச் சென்ற தலைவன் மீண்டு வந்து சிறைப்புறத்தானாதலை யறிந்த தோழி, அவன்கேட்டு விரைய வரைந்துகொள்ள வேண்டித் தலைவியை நோக்கி அன்னையெடுத்த 'வெறி நின் பசலையைத் தீர்த்திலதே ! இதனைக் கானக நாடனுக்குச் சொல்லுதுமோ'வென உள்ளுறையால் தாங்கள்படுந் துன்பமுஞ் சேரக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதனால், வெறியச்சுறுத்தி வரைவு கடாயது எனக் கொள்க.
| பெருங்களிறு உழுவை அட்டென இரும்பிடி |
| உயங்குபிணி வருத்தமொடு இயங்கல்செல் லாது |
| நெய்தற் பாசடை புரையும் அஞ்செவிப் |
| பைதலங் குழவி தழீஇ ஒய்யென |
5 | அரும்புண் ணுறுநரின் வருந்தி வைகுங் |
| கானக நாடற் கிதுவென யானது |
| கூறின் எவனோ தோழி வேறுணர்ந்து |
| அணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டி |
| வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து |
10 | அன்னை அயரும் முருகுநின் |
| பொன்னேர் பசலைக் குதவா மாறே. |
(சொ - ள்.) தோழி வேறு உணர்ந்து அணங்கு அறிகழங்கின் கோட்டம் காட்டி வெறி என உணர்ந்த உள்ளமொடு - தோழீ ! தலைவனைப் பிரிந்ததனாலாகிய நின் மெய்வேறுபாட்டைப் பிறிதொன்றாகக் கருதித் தெய்வத்தான் அறியப்படுகின்ற கழங்கில் அம்மாறுபாட்டைக் காட்டுதலாலே வெறி எடுத்தவழித் தீருமென்றறிந்த வுள்ளத்துடனே, மறி அறுத்து அன்னை அயரும் முருகு - யாட்டை அறுத்து அன்னையால் வணங்கப் படாநின்ற முருகவேள்; நின் பொன் நேர் பசலைக்கு உதவாமாறு - நினது பொன் போன்ற பசலையைப் போக்குதற்குப் பயன்படாமையினாலே; உழுவை பெருங்களிறு அட்டு என இரும்பிடி - புலியானது பெரிய களிற்றியானையைக் கொன்றதேயென்று