(து - ம்.) என்பது, பகற்குறிவந் தொழுகா நின்ற தலைமகனைத் தோழி 'புனத்திலே தினை கொய்யுங்காலம் அணுகியதாதலின், இனித் தலைவி மனையகம் புகுதா நிற்கும். அங்ஙனம் புக்கபின் நீ ஆண்டெய்துதற் கியலாமையின் அவள் தன்னலந் தொலைந்து வருந்துமென்று யான் மருளுகின்றே' னெனவும் உள்ளுறையால் அவன் விரைவில் வரைந்துகொள்ளுமாறுங் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் .. . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.