|
|
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது, |
|
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப் |
|
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி, |
|
''அன்னா!'' என்னும், அன்னையும்: அன்னோ! |
|
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை |
|
ஆரம் நாறும் மார்பினன் |
|
மாரி யானையின் வந்து நின்றனனே? |
உரை |
|
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர் |
|
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் |
|
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை- |
|
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின் |
|
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை; |
|
நகுவை போலக் காட்டல் |
|
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே? |
உரை |
|
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பனாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன். |
|
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர் |
|
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன |
|
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை. |
|
வெள் வீத் தாழை திரை அலை |
|
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே? |
உரை |
|
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன் |
|
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு |
|
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம் |
|
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது |
|
தண் பெரும் பௌவம் அணங்குக-தோழி!- |
|
மனையோள் மடமையின் புலக்கும் |
|
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே! |
உரை |
|
காதற் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. - மாங்குடிமருதன் |
|
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு, |
|
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை- |
|
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம் |
|
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள் |
|
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே. |
உரை |
|
பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர். |
|
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை |
|
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், |
|
ஊரோ நன்றுமன், மரந்தை; |
|
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே. |
உரை |
|
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
|
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், |
|
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ, |
|
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் |
|
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் |
|
''இனிது'' எனக் கணவன் உண்டலின், |
|
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. |
உரை |
|
கடிநகர்ச் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
|
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை |
|
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து |
|
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன |
|
நறுந் தண்ணியளே, நல் மா மேனி; |
|
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள் |
|
மணத்தலும் தணத்தலும் இலமே; |
|
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. |
உரை |
|
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார் |
|
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின் |
|
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம் |
|
நும்மொடு நக்க வால் வெள் எயிறே: |
|
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல |
|
எமக்கும் பெரும் புலவு ஆகி, |
|
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே. |
உரை |
|
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம். - வெள்ளிவீதியார். |
|
பலரும் கூறுக, அஃது அறியாதோரே- |
|
அருவி தந்த நாட் குரல் எருவை |
|
கயம் நாடு யானை கவளம் மாந்தும் |
|
மலை கெழு நாடன் கேண்மை |
|
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே, |
உரை |
|
வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கருவூர் கிழார் |
|