|
|
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக் |
|
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக் |
|
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல் |
|
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல், |
|
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர் |
|
வாராதுஆயினும், வருவது போலச் |
|
செவிமுதல் இசைக்கும் அரவமொடு |
|
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே. |
உரை |
|
வரைவிடை வைப்ப, ''ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன் |
|
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே? |
|
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப் |
|
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்; |
|
அன்னோ! இன்னும், நல் மலை நாடன், |
|
''பிரியா நண்பினர் இருவரும்'' என்னும் |
|
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன் |
|
துஞ்சு ஊர் யாமத்தானும், என் |
|
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே. |
உரை |
|
வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - மாங்குடி கிழார் |
|
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு |
|
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல் |
|
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! |
|
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப் |
|
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும் |
|
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல் |
|
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே. |
உரை |
|
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன் |
|
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி |
|
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் |
|
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் |
|
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, |
|
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து |
|
வெண் தோடு இரியும் வீ ததை கானல், |
|
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு |
|
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே. |
உரை |
|
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன் |
|
கண் தர வந்த காம ஒள் எரி |
|
என்பு உற நலியினும், அவரொடு பேணிச் |
|
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே |
|
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே; |
|
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் |
|
குப்பைக் கோழித் தனிப் போர் போல, |
|
விளிவாங்கு விளியின் அல்லது, |
|
களைவோர் இலை-யான் உற்ற நோயே. |
உரை |
|
காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தொடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. - குப்பைக் கோழியார். |
|
''மெல்லிய, இனிய, மேவரு தகுந, |
|
இவை மொழியாம்'' எனச் சொல்லினும், அவை நீ, |
|
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன் |
|
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் |
|
வண்டு வீழ்பு அயரும் கானல்- |
|
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே? |
உரை |
|
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
|
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ, |
|
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி, |
|
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ, |
|
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன் |
|
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, |
|
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி, |
|
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து, |
|
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் |
|
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே? |
உரை |
|
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டில்யன் |
|
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய |
|
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து, |
|
மயங்குதுயர் உற்ற மையல் வேழம் |
|
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, |
|
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் |
|
மா மலைநாடன் கேண்மை |
|
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே. |
உரை |
|
வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன் |
|
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார், |
|
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, |
|
நீடிய வரம்பின் வாடிய விடினும், |
|
''கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்'' என்னாது'' |
|
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் |
|
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!- |
|
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும், |
|
நின் இன்று அமைதல் வல்லாமாறே. |
உரை |
|
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன் |
|
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; |
|
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும், |
|
நம்மே போலும் மம்மர்த்து ஆகி, |
|
எல்லை கழியப் புல்லென்றன்றே; |
|
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை |
|
தண்ணிய கமழும் ஞாழல் |
|
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே. |
உரை |
|
வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. - பெருங்கண்ணன் |
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next