|
|
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு |
|
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை |
|
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு |
|
காலை வந்த முழுமுதற் காந்தள் |
|
மெல் இலை குழைய முயங்கலும், |
|
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே. |
உரை |
|
வரைவு மலிந்தவழித் தோழி, ''நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர் |
|
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! |
|
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்; |
|
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு, |
|
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி, |
|
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய |
|
விண் தோய் மா மலைச் சிலம்பன் |
|
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே? |
உரை |
|
வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது. - வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் |
|
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு, |
|
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும் |
|
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று, |
|
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் |
|
இன்னா அருஞ் சுரம் இறத்தல் |
|
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே? |
உரை |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது. - செல்லூர்க் கொற்றன் |
|
அரில் பவர்ப் பிரம்பின் வரி புற நீர்நாய் |
|
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் |
|
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி |
|
எற் புறங்கூறும் என்ப; தெற்றென |
|
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர் |
|
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக் |
|
கண் பொர, மற்று அதன்கண் அவர் |
|
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே. |
உரை |
|
வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது. - ஒளவையார் |
|
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் |
|
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே- |
|
துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி |
|
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் |
|
மருங்கில் கொண்ட பலவின் |
|
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே. |
உரை |
|
''யான் வரையும் துணையும் ஆற்றவல்லளோ?'' என வினவிய கிழவற்குத் தோழி சொல்லியது.- மதுரை நல்வெள்ளி |
|
பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின் |
|
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?- |
|
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப் |
|
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த |
|
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு, |
|
ஒழுகு கண்ணள் ஆகி, |
|
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே. |
உரை |
|
காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?'' என்று செவிலி வினாவ, தோழி கூறியது. - பேரிசாத்தன் |
|
கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின் |
|
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர், |
|
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே- |
|
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப் |
|
பூசல் ஆயம் புகன்று இழி அருவி |
|
மண்ணுறு மணியின் தோன்றும் |
|
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே. |
உரை |
|
வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழிஉவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகன் |
|
மெல்லியலோயே! மெல்லியலோயே! |
|
நல் நாண் நீத்த பழி தீர் மாமை |
|
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின், |
|
சொல்ல கிற்றா மெல்லியலோயே! |
|
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே, |
|
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து |
|
இடிகரைப் பெரு மரம் போல, |
|
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே. |
உரை |
|
வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது. - நக்கீரர் |
|
அத்த வாகை அமலை வால் நெற்று, |
|
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக் |
|
கோடை தூக்கும் கானம் |
|
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே. |
உரை |
|
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது. - குடவாயிற் கீரத்தனார் |
|
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை |
|
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு |
|
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின், |
|
வில்லக விரலின் பொருந்தி; அவன் |
|
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே. |
உரை |
|
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டபரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - வில்லக விரலினார் |
|