|
|
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும், |
|
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி |
|
அருவியின் விளைக்கும் நாடனொடு, |
|
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே. |
உரை |
|
வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகூத்தன் |
|
பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய, |
|
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக் |
|
கணம் கொள் சிமைய உணங்கும் கானல், |
|
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக் |
|
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை |
|
புலர் பதம் கொள்ளா அளவை, |
|
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
உரை |
|
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - விற்றூற்று மூதெயினனார் |
|
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும், |
|
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும், |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் |
|
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க் |
|
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை |
|
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி |
|
காந்தள்அம் சிறுகுடிக் கமழும் |
|
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
உரை |
|
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன் |
|
எந்தையும் யாயும் உணரக் காட்டி |
|
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின், |
|
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப, |
|
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே- |
|
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ, |
|
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த |
|
கூடினும் மயங்கிய மையல் ஊரே. |
உரை |
|
அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. - உறையூர்ப் பல்காயனார் |
|
அம்ம வாழி, தோழி!-இன்று அவர் |
|
வாரார் ஆயினோ நன்றே-சாரல் |
|
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து |
|
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை |
|
பானாள் யாமத்தும் கறங்கும். |
|
யாமம் காவலர் அவியாமாறே. |
உரை |
|
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது. |
|
மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில் |
|
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப, |
|
வேனிலானே தண்ணியள்; பனியே, |
|
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென, |
|
அலங்கு வெயில் பொதிந்த தாமரை |
|
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே. |
உரை |
|
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- படுமரத்து மோசி கொற்றன் |
|
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய, |
|
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும், |
|
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே- |
|
அறிதற்கு அமையா நாடனொடு |
|
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே. |
உரை |
|
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.- மோசி கொற்றன் |
|
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய, |
|
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய், |
|
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச் |
|
சுடர் வாய் நெடு வேற் காளையொடு |
|
மட மா அரிவை போகிய சுரனே! |
உரை |
|
மகட் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. - கயமனார் |
|
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப் |
|
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு, |
|
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன், |
|
''அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி! |
|
எம்மில் வருகுவை நீ'' எனப் |
|
பொம்மல் ஓதி நீவியோனே? |
உரை |
|
நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது. |
|
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர் |
|
வென்று எறி முரசின் நன் பல முழங்கி, |
|
பெயல் ஆனாதே, வானம்; காதலர் |
|
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே; |
|
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய |
|
வண்ணத் துய்மலர் உதிர |
|
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே! |
உரை |
|
பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், ''கதுமென ஆற்றுவிப்பது அரிது'' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்றாமை விளங்கத் தோழி சொல்லியது. -
கருவூர்க் கதப்பிள்ளை. |
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next