பக்கம் எண் :


26


    4. நிவந்த நெய்தல்: “நீணறு நெய்தல்” (குறிஞ்சிப். 79.) கணைக்கால் நெய்தல்: பெரும்பாண.் 213; நற். 138:6: அகநா. 360:4 4-5. கழிநெய்தல்: குறுந். 336:5: நற். 117:2-3, 382: 1-2; ஐங். 183:5 4-6. நெய்தற் பூவிற்குக் கண் உவமை: “கண்போ னெய்தல்”, “கழிசேர் மருங்கிற் கணைக்கா னீடிக், கண்போற் பூத்தமை கண்டு நுண்பல, சிறுபா சடைய நெய்தல்”, “ஒண்ணுதன் மகளி ரோங்குகழிக் குற்ற, கண்ணே ரொப்பிற் கமழ்நறு நெய்தல்” (நற். 8:8, 27:9-11, 283: 1-2); “கண்போனெய்தல்” (ஐங். 151:4); “இருங்கழி மலர்ந்த கண்போனெய்தல்” (அகநா. 170:4); ‘‘கண்ணவிழ் நெய்தலும்’’(சிலப். 14:77.)

    7. தலைவனது கொடுமை: குறுந். 145: 2, 224: 2, 245: 5: ஐங். 11:2, 12: 2: இறை. 45. 7-8. தலைவி தலைவனது கொடுமையை மறைத்தல்: “தன்னெவ்வங் கூரினு நீ செய்த வருளின்மை, என்னையு மறைத்தாளென் றோழியது கேட்டு, நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூற றானாணி; கூரு நோய் சிறப்பவு நீசெய்த வருளின்மை, சேரியு மறைத்தாளென் றோழியது கேட்டாங், கோருநீ நிலையலை யெனக்கூற றானாணி; நோயட வருந்தியுநீசெய்த வருளின்மை, ஆயமு மறைத்தாளென் றோழியது கேட்டு, மாயநின் பண்பின்மை பிறர்கூற றானாணி’’, ‘‘இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலின், நின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன்’’(கலி. 44:8-16, 124:13-4).

     மு. (குறுந். 10): ‘‘வேயாது செப்பி னடைத்துத் தமிவைகும் வீயினன்ன, தீயாடி சிற்றம் பலமனை யாடில்லை யூரனுக்கின், றேயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள், யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே’’ (திருச்சிற்.74.)

(9)
  
(பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வந்து வாயில் வேண்டியஇடத்துத் தோழி, ‘‘ஏற்றுக் கோடற்குத் தகாத கொடுமையை உடையனாயினும் அதனை மனங்கொள்ளாமல், கற்பொழுக்கத்தின் சிறப்பினால்தலைவன் கொடுமையை மறைத்து அவன் நாணும்படி தலைவி தானேஅவனை ஏற்றுக் கொள்ள வருகின்றாள்’’என்று கூறியது.)
 10.   
யாயா கியளே விழவுமுத லாட்டி  
    
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் 
    
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் 
    
காஞ்சி யூரன் கொடுமை 
    
கரந்தன ளாகலி னாணிய வருமே. 

என்பது தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

ஓரம்போகியார் (பி-ம். ஓரம்போதியார்).

    (பி-ம்.) 2. ‘படீய’, ‘பறீஇயர’்.

    (ப-ரை.) யாயாகியள்-தலைவியாயவள், விழவு முதலாட்டி-தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து குலாவு வதற்குக் காரணமாக உள்ளாள்; பயறு போல் இணர பைந்