பக்கம் எண் :


204


வயவர்”, “வல்விற் குமரர்”, “வல்வில் லிளையர்” (பெருங். 1.47: 32, 56:45, 264:3.17:217); “சுற்றார் வல்வில்”, “மராமர மேழு மெய்த வாங்குவிற் றடக்கை வல்வில், இராமன்” (சீவக. 1057, 1643)

     வல்வில்லின் தன்மை: கம்ப. குலமுறை. 26, மராமரப். 138-9.

     வல்வில் ஓரி: நற்.6:9; அகநா. 209:13-4; புறநா. 158:5.

     கொல்லிமலை ஓரிக்குரியது: “ஓரி கொல்லி”(நற். 265:7); “ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 208:21-2); “ஓங்கிருங் கொல்லிப் பொருநன்”, “கொல்லி யாண்ட வல்வி லோரி” (புறநா. 152:31, 158:5.)

     5-6. கொல்லிப்பாவை: குறுந். 89: 4-6, ஒப்பு.

     7. தோள் மணத்தல்: குறுந். 50:5, ஒப்பு.

     தோள் அரிய: குறுந். 272:1-8.

(100)
  
(தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத் தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று பாங்காயினார் கேட்பக் கூறியது.)
 101.    
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் 
    
அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும் 
    
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே 
    
பூப்போ லுண்கட் பொன்போன் மேனி 
5   
மாண்வரி யல்குற் குறுமகள் 
    
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே. 

என்பது (1) தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

     (பாங்காயினார் - தோழி முதலியோர்.)

(2) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கிய தூஉமாம்.

     (வலித்தநெஞ்சு - பொருளீட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த நெஞ்சு செலவு அழுங்கியது - செல்லுதலைத் தவிர்ந்தது.)

பரூஉமோவாய் (பி-ம். பருவ மோவாய்)ப் பதுமன்.

     (ப-ரை.) விரி திரை பெரு கடல் - விரிந்த அலையையுடைய பெரிய கடல், வளைஇய உலகமும் - வளைந்த பூவுலக இன்பமும், அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் - பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும், இரண்டும் - ஆகிய இரண்டும், பூ போல் உண்கண் - தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன் போல் மேனி - பொன்னைப் போன்ற நிறத்தையும், மாண் வரி அல்குல் - மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்