பக்கம் எண் :


206


     4. பூப்போலுண்கண்:முல்லை. 23;நற். 20:6, 325:7;ஐங். 16:4. 101:4.

     பூவைப்போன்ற உண்கண்: குறுந். 5:5, 377:1.

     கண்ணிற்குப் பூ: குறுந். 72:1-5, ஒப்பு.

     பொன் போல் மேனி: குறுந். 319:6; நற். 10:2; ஐங். 230:4; அகநா. 212:1-2.

     5. மாண்வரி யல்குல்: குறுந். 180: 5-6.

     தலைவியைக் குறுமகளென்றல்: குறுந். 89:7, ஒப்பு.

     மு. ஒருவகைஒப்பு: குறுந். 267; பட். 218-20; குறள், 1103; திருச்சிற்.46

(101)
  
(தலைவன் பிரிந்து நெடுங்காலம் நீட்டித்தானாக அதனை உணர்ந்து அவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனத் தோழி கவன்றதையறிந்து அத்தலைவி ‘அவரை நினைந்து நினைந்து காமநோய் மிக்கு வருந்துகின்றேன்; அவர் தம் சொற்படி இன்னும் வந்திலர்’ என்று கூறியது.)
 102.    
உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா 
    
திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி் 
    
வான்றோய் வற்றே காமம் 
    
சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே. 

என்பது ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, ‘யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?’ என்றது (பி-ம். என்கின்றது, எனக் கூறாநின்றது.)

ஒளவையார் (பி-ம். அவ்வையார்.)

     (பி-ம்.) 2. வருத்தின், வருந்தின்.

     (ப-ரை.) உள்ளின் உள்ளம் வேம் - தலைவரை நினைந்தால் எம் உள்ளம் வேவாநிற்கும்; உள்ளாது இருப்பின் - நினையாமல் இருப்பேமாயின், எம் அளவைத்து அன்று - அங்ஙனம் இருத்தல் எமது ஆற்றலளவிற்கு உட் பட்டதன்று; காமம் - காமநோயோ, வருத்தி- எம்மை வருந்தச் செய்து, வான்தோய்வற்று - வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது; யாம் மரீஇயோர் - எம்மால் மருவப் பட்ட தலைவர், சான்றோர் அல்லர் - சால்புடை யாரல்லர்.

     (முடிபு) உள்ளின் உள்ளம் வேம்; உள்ளாதிருப்பின் எம் அளவைத்தன்று; காமம் வான்தோய்வற்று; மரீஇயோர் சான்றோரல்லர்.

     (கருத்து) தலைவர் தம் சொற்படி மீண்டு வாராமையின் ஆற்றேனா யினேன்.

     (வி-ரை.) தலைவனை நினைந்த காலத்தில் அவனது பிரிவுத்துன்பம் தோற்றுதலின் உள்ளின் உள்ளம் வேமென்றாள். உள்ளம் வேதலாவது புறத்தேதுன்பம் தோற்றாவாறு உள்ளத்துள்ளே துயரத்தை அடக்கி நிற்றல்.