பக்கம் எண் :


212


     மஞ்ஞை நடுங்குதல்: குறிஞ்சி.169.

     4. வெறியுறு வனப்பு: “வெறிகொள் பாவையிற் பொலிந்த” (அகநா.370:14.)

     வெறியுற்றார் நடுங்குதல்: குறுந்.52:2, ஒப்பு.

     9. ஆகின்று: குறுந்.15:4, 166:4

(105)
  
(பரத்தையிற் பிரிந்த தலைவன் தான் குறைவில்லா அன்புடையனென்று கூறித் தூது விடுப்ப, அதனையறிந்த தலைவி, “தலைவர் உள்ளத்தாற் பொய்யாது அன்புடையராயின் யாமும் பழைய அன்புடையே மென்பதை அவருக்குக் கூறி விடுப்போம்” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் வாயில் நேர்ந்ததைப் புலப்படுத்தியது.)
 106.    
புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் 
    
வரையிழி யருவியிற் றோன்று நாடன் 
    
தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின் 
    
வந்தன்று வாழி தோழி நாமும் 
5
நெய்பெய் தீயி னெதிர்கொண்டு் 
    
தான்மணந் தனையமென விடுகந் தூதே. 

என்பது தலைமகள் தூதுகண்டு கிழத்தி தோழிக்குக் கூறியது.

கபிலர்.

     (பி-ம்.) 1. ‘வீழாற்றிக’், ‘வீழித்திக’்; 3. ‘தீதின்னெஞ்சத்துக்’; 4. ‘நயந்தன்று’; 6. தாமளந்தனைய, தாம்வரைந்தனைய.

     (ப-ரை.) தோழி----, புல் வீழ் இற்றி - புல்லிய விழுதை யுடைய இற்றிமரத்தினது, கல் இவர் வெள் வேர் - மலையிலுள்ள கற்களிற் படர்கின்ற வெள்ளிய வேர், வரை இழி அருவியின் தோன்றும் - மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப்போலத் தோன்றும், நாடன் - நாட்டையுடைய தலைவன், தீது இல் நெஞ்சத்து கிளவி - குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது, நம் வயின் வந்தன்று - நம்மிடத்து வந்தது; நாமும்--, நெய் பெய் தீயின் - நெய்யைப் பெய்த தீயைப்போல, எதிர் கொண்டு - அத்தூதை ஏற்றுக்கொண்டு, தான் மணந்தனையம்என - அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி, தூதுவிடுகம் - தூதுவிடுவேம்.

     (முடிபு) தோழி, நாடன் தீதில் நெஞ்சத்துக்கிளவி வந்தன்று; நாமும் எதிர்கொண்டு தூதுவிடுகம்.