கபிலர். (பி-ம்.) 1. ‘பெருநன்றாற்றிய’, ‘பெருநன்றொன்றிற’்; 2. ‘புரிமாணாடு’; 3-4. ‘யிலை கவரப் பாடமை பொழுகிய’.
(ப-ரை.) ஆடு அமை ஒழுகிய -அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, தண் நறு சாரல் - தண்ணிய நறிய மலைப் பக்கத்தின் கண், மெல் நடை மரையா - மெல்லிய நடையையுடைய மரையா, இலை கவர்பு - இலைகளை விரும்பி உண்டு, துஞ்சும் - துயிலுதற்கிடமாகிய, நல் மலை நாட -நல்ல மலை நாட்டையுடைய தலைவ, பெரு நன்று ஆற்றின் - பெரிய நன்மை யொன்றை ஒருவர் தமக்குச் செய்தால்,