பக்கம் எண் :


230


     சேய்மையிற் கண்டபோழ்து தோற்றத்தால் இன்பத்தைத் தரும் என்பான் நன்னெறியவ்வே யென்று முதலிலும், நெருங்கும் போழ்து மணத்தால் இன்பத்தைத் தருமென்பான் நறுமை யுடையன வென்றும், பின்னும் நெருங்கி அளவளாவிய போழ்து ஊற்றினாலின்பந் தருமென்பான் தண்ணிய வென்றும் முறையே கூறினான்.

     நன்னெறி யவ்வே : வகரம் விரிக்கும் வழி விரித்தது. ஏகாரங்கள் அசைநிலை.

     ஒப்புமைப் பகுதி 2. சோழர் உறந்தை : அகநா. 93:4-5, 369:13-4, 385: 3-4.

     3. மணலின் நெறிப்பு : குறுந். 351:3.

     4. கூந்தலின் நெறிப்பு : குறுந். 190:1, 199:4.

     1-4. கூந்தலின் நறுமணமும் தண்மையும் : “தண்ணிய கமழுந் தாழிருங் கூந்தல்” (நற். 137:1)

(116)
  
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக, அவ்வொழுக்கத்தால் வரும் அச்சத்தினும் அவன் வாராதமைவதால் வரும் துன்பம் பொறுத்துக் கொள்ளுதற்கரியது என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)
 117.    
மாரி யாம்ப லன்ன கொக்கின் 
    
பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு 
    
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர் 
    
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்  
5
வாரா தமையினு மமைக்  
    
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே. 

என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

குன்றியன் (பி-ம். குன்றியனார்.)

     (பி-ம்.) 3. ‘செலீஇ’; 4. ‘கயிறரி பெருந்தீரத் தழுந்துந் துறைவன்’, ‘பெருந்திறத் தழுந்து துறைவன்’.

     (ப-ரை.) தோழி---, மாரி ஆம்பல் அன்ன கொக்கின் - மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தை உடைய கொக்கினது, பார்வல் அஞ்சிய பருவரல் - பார்வையை அஞ்சிய துன்பத்தையுடைய, ஈர் ஞெண்டு - ஈரமான நண்டு, கண்டல் வேர் அளை செலீஇயர் - தாழை வேரினிடையே உள்ள வளைக்குட் செல்லும் பொருட்டு, அண்டர் கயிறு அரி எருத்தின் - இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல, கதழும் -