பக்கம் எண் :


32


இதனை அறியலாம். வழியினது வெம்மையும் ஆறலைகள்வரால் வரும்அச்சமும் வழியினது மயக்கமும் அவலத்திற்கு ஏதுவாயின.

     மேற்கோளாட்சி 1-2. இயற்சீர் வெள்ளடி ஆசிரியம் தொடுக்குங்கால் பா ஒன்றாகத் தொடுக்கப்படும் (தொல். செய். 162, பேர்.); இயற்சீர் வெள்ளடி ஆசிரியத்தில் விரவி வரும் (தொல். செய். 112, இளம்,62, பேர், ந; இ.வி. 745.)

    மு. தலைவன் பிரிந்துழி வழியருமை பறர் கூறக் கேட்டுத் தலைவி கூறியது (தொல்.கற்பு. 6, ந.); தலைவி கொடுஞ்சொல் சொல்லியது (நம்பி. 170); இயற்சீர் வெள்ளடி ஆசிரியத்தில் விரவி வரும் (யா.வி.29;யா. கா. ஒழிபு 4).

    ஒப்புமைப் பகுதி1. சுனையின் குறுமை; ‘‘மட்டம் பெய்த மணிக்கலத்தன்ன, இட்டுவாய்ச் சுனைய’’ (குறுந். 193:1-2.)

    1-2. சுனையை உடைய பாறை; ‘‘பிடிதுஞ்சு வன்ன வறைமேல நுங்கின், தடிகண் புரையுங் குறுஞ்சுனை’’ (கலித்.108; 40-41); ‘‘பாறை நெடுஞ்சுனை’’ (அகநா.2:4.)

    3. கொடுவில் எயினர்: ‘‘மாரி வளம்பெறா வில்லே ருழவர், கூற்றுறழ் முன்பொடு கொடுவி லேந்தி’’ (சிலப்.11: 210-11.)

    4. ஆறு கவலைத்து: ‘‘கவலை யாத்த வவல நீளிடை’’ (குறுந்.224:1.)

    6. அழுங்கலூர: குறுந். 140:5, 289:8.

 மு. 
‘‘மண்டுந் திரைவையை சூழ்தஞ்சை வாணற்கு வன்புலியும் 
  
 செண்டுங் கொடுத்தகல் செம்பியர் போலன்பர் சென்றுழிமுள் 
  
 இண்டுங் கழையும் பயிலும்வெங் கானியல் கேட்டுமிந்நோய் 
  
 கண்டுங் கலங்கல்செல் லாதிந்த வூரெற் கழறனன்றே’’-(தஞ்சை. 266) 
(12)
  
(பாங்கியிற் கூட்டத்தின் பின் பிரிவாற்றாமல் வருந்திய தன் வேறுபாடுகளை உணர்ந்து கவன்ற தோழியை நோக்கி, ‘‘தலைவரது பிரிவினால்எனது உள்ளம் நோய் கொண்டது; கண்களும் அழகிழந்து பசலையை அடைந்தன’’ என்று தலைவி கூறி ஆற்றாமைக்குக் காரணத்தைப் புலப்படுத்தியது.)
 13.    
மாசறக் கழீஇய யானை போலப் 
    
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்  
    
பைத லொருதலைச் சேக்கு நாடன் 
    
நோய்தந் தனனே தோழி 
5
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே.  

என்பது தலைவன் தோழியிற் கூட்டங்கூடி (பி-ம். கூட்டி) ஆற்றும்வகையான் ஆற்றிவித்துப் பிரிய, வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது.