பக்கம் எண் :


260


     5. தலைவன் தலைவியின் நலனுண்டல்: குறுந்.112:5, 236:6, 384:3.

     தலைவன் புதிதுண்டல்:“தோள் புதிதுண்ட ஞான்றை”(அகநா.320:13); “பூமாண் கருங்குழலா ருள்ளம் புதிதுண்பான்” (ஆதியுலா, 58.) தலைவன் நலம் புதிதுண்டல்: “பூவினன்ன நலம்புதிதுண்டு” (நற். 15:4); “நலம்புதி துண்டுள்ளா நாணிலி” (கலி.83:21); “பொன்மாலை மார்பனென் புதுநலனுண் டிகழ்வானோ” (தே. திருநா. திருப்பழனம்.)

(133)
  
(தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவிப்ப அத்தோழியை நோக்கி, “தலைவன் பிரியாமல் இருப்பின் அவனது நட்பு நன்று; பிரிவுண்மையின் வருத்தம் உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)
 134.   
அம்ம வாழி தோழி நம்மொடு 
    
பிரிவின் றாயி னன்றுமற் றில்ல 
    
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப் 
    
பூவுடை யலங்குசினை புலம்பத் தாக்கிக் 
5
கல்பொரு திரங்குங் கதழ்வீ ழருவி  
    
நிலங்கொள் பாம்பி னிழிதரும் 
    
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே. 

என்பது வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.

கோவேங்கைப் பெருங்கதழ்வன்.

     (பி-ம்.) 2. ‘நன்றுமற்றில்லை’, ‘நன்று மாறில்ல’; 4. ‘பூவிடை’; 5. ‘பொரு திலங்கும்',‘கதம் வீழருவி’.

     (ப-ரை.) தோழி---, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக; குறு பொறை தடைஇய - குறிய கற்களினிடத்தே பருத்து வளர்ந்த, நெடு தாள் வேங்கை - உயர்ந்த அடியையுடைய வேங்கை மரத்தினது, பூ உடை அலங்கு சினை - மலர்களையுடைய அசைந்த கிளைகள், புலம்ப - அம் மலர்களை நீங்கித் தனிக்கும்படி, தாக்கி - அடித்து, கல் பொருது - கற்களை அலைத்து, இரங்கும் - ஒலிக்கும், கதழ் வீழ் அருவி - விரைந்து வீழும் அருவியானது, நிலம் கொள்பாம்பின் - நிலத்தைத் தனக்கு இடமாக ஊர்ந்து கொள்ளும் பாம்பைப்போல, இழிதரும் - இறங்குதற்கிடமாகிய, விலங்குமலை நாடனொடு - ஒன்றற் கொன்று குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனோடு,