பக்கம் எண் :


276


     பின்னுமென்றது தான் தலைவியோடு அளவளாவுவதற்கு முன்னும் அவளைக் கண்ட மாத்திரத்தே தன் நெஞ்சம் அவள் பாற் சென்றதென்பதைக் குறித்து நின்றது.

     ‘பின்னுத் தன்னுழையதுவே’ என்ற பாடத்திற்குத் தலைவியின் பின்னலினிடத்ததென்று பொருள் கொள்க;

  
“கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக் 
  
 கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் 
  
 பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் 
  
 தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ 
  
 நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் 
  
 அந்தீங் கிளவிக் குறுமகள் 
  
 மென்றோள் பெறனசைஇச் சென்றவென் னெஞ்சே”     (அகநா. 9:20-26) 

என்பதைக் காண்க.

     தோழிக்குத் தலைமகன் தன்குறை கூறியதாக இச் செய்யுளைக் கொள்ளுங்கால், ‘ஆதலின் என் உள்ளம் விரும்பியதை யான் பெருவேனாக” என்ற எச்சத்தைப் பெய்து பொருளுரைக்க.

     மேற்கோளாட்சி 3-4. உயிர்ப்பு என்பது முன்புவிடும் அளவினன்றிச் சுவாதம் நீள விடுதல். (தொல்.மெய்ப். 12, இளம்.).

     ஒப்புமைப் பகுதி 1. மகளிர் பூக்குறுதல்: குறுந். 144:1, 178:3. “பூக்குற்றெய்திய” (ஐங். 23:2); “சுனைப்பூக் குற்றுஞ் சுள்ளி சூடியும்” (பெருங். 2.12:129.)

     தொடலை தைஇ: அகநா.105:2.

     1. மு. நற். 173:1.

     2. பானாள்: குறுந். 94:3, ஒப்பு. அறிந்தன்றோ விலள்: பதிற்.77:7, உரை.

     4. பள்ளி யானையின் உயிர்த்தல்: “பள்ளி யானையி னுயிரா வசைஇ” (குறுந். 359:4); “பள்ளி யானையின் வெய்ய வுயிரினை” (நற். 253:2.) பள்ளியானை: அகநா. 302:3.

     தலைவனுக்கு யானை உவமை: அகநா. 6:9.     

(142)
  
(தலைவன் வரைபொருட்காகப் பிரிந்தவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் நம்முடைய வருத்தத்தை யறிந்து இரங்கும் தன்மை யுடையவர்; ஆதலின் அவர் விரைவில் வருவர்; நின் மேனிப் பசப்பு அவர் வரவால் நீங்கிவிடும்” என்று தோழி கூறியது.)
 143.    
அழிய லாயிழை யழிபுபெரி துடையன் 
    
பழியு மஞ்சும் பயமலை நாடன் 
    
நில்லா மையே நிலையிற் றாகலின் 
    
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்