பக்கம் எண் :


279


பசலை உண்டாவதும், அவனோடு பொருந்திய காலத்தில் அது நீங்குவதும் மரபு; இதனை இந்நூல் 399-ஆம் செய்யுளால் நன்குணரலாகும். பசலை நீங்குமென்று தோழி கூறியது. இந்நீக்கத்திற்குக் காரணமாகிய தலைவர் வரவு உண்டாகுமென்னும் கருத்தை நினைந்தே.

     அம் கலுழ்மேனி யென்றது பசலை பரவாது இயல்பான அழகுடன் நின்ற மேனியை; அழகுதான் தங்குதற்குரியது, அதனை மறைக்கும் பசலை தங்குதற்குரியதன்றென்பதை இவ்வடையினால் உணர வைத்தாள்.

     பசப்பு - பசலை. ஏகாரம் அசை நிலை.

     மேற்கோளாட்சி மு. தோழி தலைமகள் ஆற்றுவித்தது (தொல். களவு. 24, இளம்.); தோழி இயற்பட மொழிந்து தலைவியை வற்புறுத்தியது (தொல். களவு. 23. ந..)

     ஒப்புமைப் பகுதி 1. பி-ம். தலைவன் அன்புடையன்: குறுந். 37:1, 213:1.

     2. தலைவன் பழியஞ்சுதல்; குறுந். 252:8. பயமலை: மணி.17:50; பெருங்.2. 18:3. பயமலை நாடன்: கலி. 43:6.

     3-4. உலகின் நிலையாமையும் புகழின் நிலைபேறும்: “நில்லா வுலகத்து நிலைமை” (பொருந. 176, பெரும்பாண். 466); “மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே” (புறநா.165:1-2); “மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தஞ்சைவாணன்” (தஞ்சை. 21.)

     புகழின் நிலை பேறு: மலைபடு. 70, அடிக்.

     7. அங்கலுழ் மேனி: “அங்கலி ழாகம்”, “அங்கலிழ் மேனி” (ஐங். 106:4, 174:4); “அங்கலுழ் மாமை” (அகநா. 41:15, 96:12); “அங்கலுழ் மேனியாய்” (சீவக. 1988.)

(143)
  
(தலைவி தலைவனுடன் போனாளாக, அவளைப் பிரிந்த செவிலித்தாய், “ஆயமகளிரோடு பிரிவின்றி விளையாடும் என் மகள் இப்பொழுது பாலைநிலத்திலே பரல் தன் அடிகளை வருத்தா நிற்க எம்மைப் பிரிந்து சென்றனள்” என்று கூறி வருந்தியது.)
 144.   
கழிய காவி குற்றுங் கடல 
    
வெண்டலைப் புணரி யாடியு நன்றே 
    
பிரிவி லாய முரியதொன் றயர 
    
இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப் 
5
பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ 
    
சென்மழை தவழுஞ் சென்னி 
    
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே. 

என்பது மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

மதுரை ஆசிரியன் கோடங்கொற்றன் (பி-ம். மதுரை நூலாசிரியன், மதுரைப்பாலாசிரியன்.)